search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான குதிரைவாலி தேங்காய் சாதம்
    X

    சத்தான குதிரைவாலி தேங்காய் சாதம்

    சிறுதானியங்களில் குதிரைவாலி மிகவும் சத்து நிறைந்தது. இன்று குதிரைவாலி அரிசியை வைத்து சத்துநிறைந்த தேங்காய் சாதம் செய்து எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - ஒரு கப்,
    கெட்டியான தேங்காய்ப்பால் - ஒரு கப்,
    தண்ணீர்  - ஒரு கப்,
    நெய் - 3 டீஸ்பூன்,
    ஏலக்காய், பட்டை, லவங்கம், கறிவேப்பிலை - தேவையான அளவு,
    சர்க்கரை - ஒரு சிட்டிகை,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * குதிரைவாலியை அரிசியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    * அடிகனமான பாத்திரத்தில், தண்ணீரில் நன்கு களைந்த குதிரைவாலி அரிசியுடன் தேவையான நீர் சேர்த்து வேகவிடவும்.

    * முக்கால் பதம் வெந்ததும்... உப்பு, தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்க்கவும்.

    * சாதம் வெந்தவுடன்... நெய்யில் தாளித்த ஏலக்காய், பட்டை, லவங்கத்தை தேங்காய் சாதத்தில் சேர்த்துக் கிளறி இறக்கவும்...

    * சத்தான குதிரைவாலி தேங்காய் சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    Next Story
    ×