என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
உடல் எடையை குறைக்கும் வரகரசி - கொள்ளு அடை
Byமாலை மலர்29 April 2017 3:42 AM GMT (Updated: 29 April 2017 3:42 AM GMT)
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்ளவும் வேண்டும். இன்று வரகரசி, கொள்ளுவை வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வரகரிசி - 100 கிராம்,
கொள்ளு - 25 கிராம்,
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டும் சேர்ந்து - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 8,
சீரகம், பெருங்காயம் - தேவையான அளவு,
ஓமம் - சிறிதளவு,
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு,
துருவிய கேரட் / கோஸ் /முருங்கைக் கீரை தளிர் - நறுக்கியது - ஒரு சிறிய கப்.
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* வரகரிசி மற்றும் கொள்ளுடன் காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயத் தூள், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, ஓமம் என அனைத்தையும் சேர்த்து 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
* ஊற வைத்த பொருட்களை கொரகொரப்பாக அரைத்து 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
* 2 மணி நேரம் கழித்து நறுக்கிய கோஸ் /முருங்கைக் கீரை தளிர் இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஒரு கரண்டி ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சத்து நிறைந்த வரகரசி - கொள்ளு அடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
வரகரிசி - 100 கிராம்,
கொள்ளு - 25 கிராம்,
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டும் சேர்ந்து - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 8,
சீரகம், பெருங்காயம் - தேவையான அளவு,
ஓமம் - சிறிதளவு,
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு,
துருவிய கேரட் / கோஸ் /முருங்கைக் கீரை தளிர் - நறுக்கியது - ஒரு சிறிய கப்.
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* வரகரிசி மற்றும் கொள்ளுடன் காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயத் தூள், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, ஓமம் என அனைத்தையும் சேர்த்து 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
* ஊற வைத்த பொருட்களை கொரகொரப்பாக அரைத்து 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
* 2 மணி நேரம் கழித்து நறுக்கிய கோஸ் /முருங்கைக் கீரை தளிர் இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஒரு கரண்டி ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சத்து நிறைந்த வரகரசி - கொள்ளு அடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X