என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான சத்து நிறைந்த மூங்கில் அரிசி கஞ்சி
Byமாலை மலர்28 April 2017 3:38 AM GMT (Updated: 28 April 2017 3:38 AM GMT)
மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு மூங்கில் அரிசி நிவாரணம் அளிக்கும். இந்த அரிசியில் கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மூங்கில் அரிசி - 150 கிராம்,
நொய் அரிசி - 150 கிராம்,
சீரகம் - அரைத் தேக்கரண்டி,
ஓமம் - அரைத் தேக்கரண்டி,
பூண்டு - 10 பல்,
சுக்கு - ஒரு துண்டு,
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி,
உப்பு - தேவைக்கு.
செய்முறை :
* பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும்.
* பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஒரு மெல்லிய வெள்ளை துணியில் மூட்டையாக கட்டி கொள்ளவும்.
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும்.
* பூண்டு நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
* முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும்.
* அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும், கட்டி வைத்துள்ள சுக்கு மூட்டையை அதில் போட்டுக் கொதிக்கவிடவும்.
* நன்றாக வெந்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும்.
* சூப்பரான சத்து நிறைந்த மூங்கில் அரிசி கஞ்சி ரெடி.
மருத்துவப் பயன்: மூட்டு வலி, மூட்டில் நீர் கோத்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும்
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
மூங்கில் அரிசி - 150 கிராம்,
நொய் அரிசி - 150 கிராம்,
சீரகம் - அரைத் தேக்கரண்டி,
ஓமம் - அரைத் தேக்கரண்டி,
பூண்டு - 10 பல்,
சுக்கு - ஒரு துண்டு,
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி,
உப்பு - தேவைக்கு.
செய்முறை :
* பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும்.
* பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஒரு மெல்லிய வெள்ளை துணியில் மூட்டையாக கட்டி கொள்ளவும்.
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும்.
* பூண்டு நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
* முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும்.
* அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும், கட்டி வைத்துள்ள சுக்கு மூட்டையை அதில் போட்டுக் கொதிக்கவிடவும்.
* நன்றாக வெந்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும்.
* சூப்பரான சத்து நிறைந்த மூங்கில் அரிசி கஞ்சி ரெடி.
மருத்துவப் பயன்: மூட்டு வலி, மூட்டில் நீர் கோத்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும்
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X