search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்
    X

    சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்

    வயிற்றுப் புண்ணுக்கு அருமருந்தான மணத்தாக்காளிக்கீரையை கூட்டு, பொரியல், சூப், துவையல் என்று ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
    தேவையான பொருட்கள் :

    மணத்தக்காளிக்கீரை - ஒரு கப்
    குடமிளகாய் - ஒன்று (சிறியது)
    உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
    புளி - சிறிதளவு
    தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    * மணத்தக்காளிக்கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * குடமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் உளுந்தம்பருப்பு சேர்த்து லேசாகச் சிவந்ததும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.

    * அடுத்து அதில் கீரை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

    * பின்னர் குடமிளகாய், புளி, உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் 3 நிமிடம் வதக்கி, இறுதியாக தேங்காய்த் துருவலையும் சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டி அடுப்பை அணைக்கவும்.

    * அனைத்து ஆறியதும் அதை மிக்ஸியில் சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும்.

    * சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல் ரெடி.

    குறிப்பு :

    புளிப்பு, காரத்தை உங்கள் விருப்பத்துக்கேற்ப கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம். இந்தத் துவையலை கெட்டியாக அரைத்தால் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். தண்ணீர்விட்டுக் கரைத்தால் இட்லி, தோசைக்கு சட்னி போல மேட்ச் ஆகும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    Next Story
    ×