search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பசியை தூண்டும் மூலிகை சூப்
    X

    பசியை தூண்டும் மூலிகை சூப்

    பசி எடுக்காதவர்கள், அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை சூப்பை தினமும் செய்து குடிக்கலாம். இந்த சூப்பை குடித்த 1 மணி நேரத்திலேயே நல்ல பலன் கிடைக்கும்.
    தேவையான பொருட்கள் :

    மிளகு - 20 கிராம்,
    சீரகம் - 20 கிராம்,
    கண்டதிப்பிலி, அரிசித் திப்பிலி - தலா 10 கிராம்,
    ஓமம் - 20 கிராம்,
    துளசி உலர்ந்தது - ஒரு கைப்பிடி,
    உலர்ந்த கற்பூரவல்லி இலை - ஒரு கைப்பிடி,
    பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கறுப்பு உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    * அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் ஒன்றின் பின் ஒன்றாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.

    * அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து அதில் கலந்து நன்றாகக் கொதித்து 1 கப்பாக வற்றியது இறக்கி பருகவும்.

    * சூப்பரான மூலிகை சூப் தயார்.

    * இதை அருந்திய 20 நிமிடத்தில் கபகபவெனப் பசிக்கும். அஜீரண பிரச்சனை தீரும்.

    * இந்த பொடியை செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×