search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    செரிமான பிரச்சனையை தீர்க்கும் தனியா துவையல்
    X

    செரிமான பிரச்சனையை தீர்க்கும் தனியா துவையல்

    அஜீண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த தனியா துவையலை செய்து சாப்பிடால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இந்த துவையலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தனியா - கால் கப்,
    காய்ந்த மிளகாய் - 8,
    பூண்டு - 5 பல்,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
    கடுகு, உளுந்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
    தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    * வாணலியை சூடாக்கி தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.

    * அடுத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவலை தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைக்கவும்.

    * ஆறியபின் எல்லாப் பொருட்களையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் அரைக்கவும்.

    * மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து, அரைத்த துவையலில் சேர்க்கவும்.

    * சூப்பரான சத்தான தனியா துவையல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×