என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான சுவையான கோதுமை காக்ரா
Byமாலை மலர்21 April 2017 5:16 AM GMT (Updated: 21 April 2017 5:16 AM GMT)
மும்பையில் மிகவும் பிரபலமான காக்ரா. இந்த காக்ராவை கோதுமை மாவை வைத்தும் செய்யலாம். இன்று இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - ஒன்றரை கப்,
ரவை - கால் கப்,
சீரகம் அல்லது ஓமம் - அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்,
சமையல் சோடா - கால் டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* கோதுமை மாவுடன் ரவை, சீரகம் அல்லது ஓமம், மிளகாய்த்தூள். சமையல் சோடா, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து, வெதுவெதுப்பான நீர் விட்டு கலந்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதை அரை மணி நேரம் ஊறவிடவும்.
* பிசைந்த மாவை சிறு எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக செய்யவும். இதை கைகளால் நன்றாக உருட்டி, வெறும் மாவு தொட்டு எண்ணெய் தடவிய சப்பாத்திக் கல்லில் மெல்லிதாக 6 இஞ்ச் விட்டத்துக்கு பரத்தவும். இதை சூடான நான்ஸ்டிக் தவாவில் போட்டு சுழற்றி, திருப்பிப் போடவும்.
* இதில் குமிழ்கள் தோன்றி சிவப்பானதும் எடுத்து வைக்கவும்.
* இது எண்ணெய் சேர்க்காத சுட்ட அப்பளங்களைப் போல் இருக்கும்.
* ஆறவிட்டு பிளாஸ்டிக் ஜிப்லாக் கவரில் போட்டு வைத்தால், ஒரு வாரம் வரை கெடாது.
* இதை நெய், ஜாம், சாஸ் தொட்டு சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோதுமை மாவு - ஒன்றரை கப்,
ரவை - கால் கப்,
சீரகம் அல்லது ஓமம் - அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்,
சமையல் சோடா - கால் டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* கோதுமை மாவுடன் ரவை, சீரகம் அல்லது ஓமம், மிளகாய்த்தூள். சமையல் சோடா, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து, வெதுவெதுப்பான நீர் விட்டு கலந்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதை அரை மணி நேரம் ஊறவிடவும்.
* பிசைந்த மாவை சிறு எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக செய்யவும். இதை கைகளால் நன்றாக உருட்டி, வெறும் மாவு தொட்டு எண்ணெய் தடவிய சப்பாத்திக் கல்லில் மெல்லிதாக 6 இஞ்ச் விட்டத்துக்கு பரத்தவும். இதை சூடான நான்ஸ்டிக் தவாவில் போட்டு சுழற்றி, திருப்பிப் போடவும்.
* இதில் குமிழ்கள் தோன்றி சிவப்பானதும் எடுத்து வைக்கவும்.
* இது எண்ணெய் சேர்க்காத சுட்ட அப்பளங்களைப் போல் இருக்கும்.
* ஆறவிட்டு பிளாஸ்டிக் ஜிப்லாக் கவரில் போட்டு வைத்தால், ஒரு வாரம் வரை கெடாது.
* இதை நெய், ஜாம், சாஸ் தொட்டு சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X