search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த சிறுதானிய பெசரட்டு
    X

    சத்து நிறைந்த சிறுதானிய பெசரட்டு

    தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று சிறுதானியங்களை வைத்து பெசரட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    முழு பாசிபயறு - 1/2 கப்
    சோளம், தினை, குதிரைவாலி, வரகு கலந்து - 1/2 கப்
    பச்சைமிளகாய் -  2
    இஞ்சி  - சிறிய துண்டு
    வெங்காயம் - 1
    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    பெருங்காயம் - விரும்பினால் சேர்க்கலாம்



    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சிறுதானியங்களுடன், பாசிபயறு சேர்த்து நாலு மணி நேரம் ஊறவிடவும்.

    * நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் இஞ்சி, சீரகம், பச்சை மிளகாயுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து உப்பு, வெங்காயம் சேர்த்து கலந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பிபோட்டு எடுக்கவும். அடை போல வார்க்கலாம்.

    சத்து நிறைந்த சிறுதானிய பெசரட்டு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×