search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான வரகரிசி தக்காளி சாதம்
    X

    சத்தான சுவையான வரகரிசி தக்காளி சாதம்

    வரகு அரிசியில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இன்று வரகு அரிசியை வைத்து சத்தான சுவையான தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகரிசி - 1/2 கப்
    தக்காளி - 2
    வெங்காயம் - 1
    இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    கடுகு - 1/4 டீஸ்பூன்
    பட்டை - 1 இன்ச்
    கிராம்பு - 1
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    * தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    * வெங்காயத்தை நீளமாக வெட்டி கொள்ளவும்.

    * வரகரிசியை களைந்து கல் போக அரித்து தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

    * அத்துடன் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லியை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

    * பின்னர், தண்ணீர் சேர்த்து கொதித்ததும் வரகரிசி, உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கி பரிமாறவும்.

    * சுவையான வரகரிசி தக்காளி சாதம் ரெடி....

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×