search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கான காலிபிளவர் மசாலா தோசை
    X

    குழந்தைகளுக்கான காலிபிளவர் மசாலா தோசை

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த காலிபிளவர் மசாலா தோசை செய்து கொடுக்கலாம். இந்த காலிபிளவர் மசாலா தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 2 கப்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    நறுக்கிய காலிபிளவர் - 100 கிராம்
    மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தேவையான அளவு
    பெரிய வெங்காயம் - 100 கிராம்
    பெங்களூரு தக்காளி - ஒன்று
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * காலிபிளவரை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கிய  பின்னர் காலிபிளவரையும் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் நன்கு வேகவைத்து இறக்கவும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு... தயார் செய்து வைத்த காலிபிளவர் மசாலாவை அதில் வைத்து பரவலாகத் தேய்த்து தோசையை மூடி வேகவிட்டு எடுக்கவும்.

    * சூடான காலிபிளவர் மசாலா தோசை ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×