என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
முட்டைகோஸ் - பட்டாணி சாதம்
Byமாலை மலர்14 March 2017 4:53 AM GMT (Updated: 14 March 2017 4:53 AM GMT)
குழந்தைகள் மதியம் பள்ளியில் சாப்பிட மிகவும் சத்தானது முட்டைகோஸ் - பட்டாணி சாதம். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி சாதம் - 4 கப்
முட்டை கோஸ் - 400 கிராம்
வெங்காயம் - 1
பச்சை பட்டாணி - 50 கிராம்
குடமிளகாய் - 1
எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
புதினா - சிறிது
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
சிகப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை :
* முட்டைகோஸை துருவிக்கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாய், குடமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர், பச்சைப்பட்டாணி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
* பின்னர், மெல்லியதாக துருவிய முட்டை கோஸை சேர்த்து நன்கு மொற மொறவென வரும்வரை வதக்கவும் ( குழைய கூடாது).
* பின்னர் அதில் உப்பு, சிகப்பு மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.
* பின்னர், வடித்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அத்துடன் மிளகுத்தூள், நெய், புதினா இலைகளைத் தூவி சாதம் உடையாதவாறு பக்குவமாக கிளறி இறக்கவும்.
* முட்டை கோஸ் - பட்டாணி சாதம் தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாஸ்மதி அரிசி சாதம் - 4 கப்
முட்டை கோஸ் - 400 கிராம்
வெங்காயம் - 1
பச்சை பட்டாணி - 50 கிராம்
குடமிளகாய் - 1
எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
புதினா - சிறிது
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
சிகப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை :
* முட்டைகோஸை துருவிக்கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாய், குடமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர், பச்சைப்பட்டாணி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
* பின்னர், மெல்லியதாக துருவிய முட்டை கோஸை சேர்த்து நன்கு மொற மொறவென வரும்வரை வதக்கவும் ( குழைய கூடாது).
* பின்னர் அதில் உப்பு, சிகப்பு மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.
* பின்னர், வடித்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அத்துடன் மிளகுத்தூள், நெய், புதினா இலைகளைத் தூவி சாதம் உடையாதவாறு பக்குவமாக கிளறி இறக்கவும்.
* முட்டை கோஸ் - பட்டாணி சாதம் தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X