search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான சத்தான முளைகட்டிய பருப்பு புலாவ்
    X

    சுவையான சத்தான முளைகட்டிய பருப்பு புலாவ்

    முளைகட்டிய பருப்பு வகைகளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று முளைகட்டிய பருப்பு வகைகளை வைத்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பயறு - 50 கிராம்
    சுண்டல் - 50 கிராம்
    காராமணி - 50 கிராம்
    ராஜ்மா - 30 கிராம்
    பெரிய வெங்காயம் - 2
    பெங்களூர் தக்காளி - 1
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    வரமிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
    பாசுமதி அரிசி - 2 கப்
    உப்பு - தேவையான அளவு
    கிராம்பு - 5
    பட்டை - 1 இன்ச் அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
    தண்ணீர் - 5 கப்

    குறிப்பு:

    2 கப் அரிசிக்கு, 4 கப் தண்ணீர் போதுமானது. ஆனால் தானியம் - பயறு வேக வைப்பதற்காக 1 கப் கூட சேர்க்கிறோம். இல்லையெனில் பயறைத் தனியாக வேக வைத்தும் செய்யலாம்.



    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.

    * பருப்பு வகைகளை நன்றாக கழுவி சுமார் 8 மணி நேரம் நன்கு ஊற வைத்த பின் தண்ணீர் வடித்து பாத்திரத்தில் அப்படியே மூடி வைத்தால், 3 முதல் 5 மணி நேரத்தில் பருப்பு முளைத்து விடும்.

    * குக்கரில் எண்ணெய் சேர்த்து, கிராம்பு, பட்டை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

    * அடுத்து அதனுடன் முளைகட்டிய பயறைச் சேர்க்கவும்.

    * அடுத்து தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் வரமிளகாய்த்தூள் சேர்த்து கலக்கவும்.

    * அடுத்து அதில் கழுவி ஊற வைத்து சுத்தம் செய்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் 5 கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் குக்கரை மூடி 3 விசில் போட்டு வேக விட்டு இறக்கவும்.

    * சுவையான முளைகட்டிய பருப்பு புலாவ் தயார்

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×