search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான கம்பு சேமியா புலாவ்
    X

    சத்தான கம்பு சேமியா புலாவ்

    குழந்தைகளுக்கு சிறுதானிய உணவுகளை அடிக்கடி கொடுப்பது நல்லது. அந்த வகையில் இன்று கம்பு சேமியா வைத்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு சேமியா - 200 கிராம்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    சீரகம் - ½ டீஸ்பூன்
    இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    கிராம்பு - 5
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பட்டை - 1 இன்ச் அளவு
    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    ஏலக்காய் - 2
    மிளகு - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கேரட் - 100 கிராம்
    ஃப்ரஷ் பட்டாணி - 50 கிராம்
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    * தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சேமியாவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

    * கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயத் போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை, மிளகு சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு இதனைத் தனியே எடுத்து வைக்கவும்.

    * கடாயில் மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து, சுமார் 5 கப் தண்ணீர், அதனுடன் போதுமான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    * தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சேமியாவைச் சேர்த்து வேக விடவும். வெந்த சேமியா ஒன்றோடு ஒன்றாக ஒட்டக்கூடாது, உடையவும் கூடாது. சேமியா வெந்தவுடன் உதிர்த்து வைக்கவும்.

    * வதக்கிய கலவையுடன் சேமியாவைச் சேர்த்து நன்கு பிரட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    * சுவையான கம்பு சேமியா புலாவ் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×