என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த பிரண்டை சிறுதானிய தோசை
Byமாலை மலர்10 March 2017 3:31 AM GMT (Updated: 10 March 2017 3:31 AM GMT)
பிரண்டையுடன் சிறுதானியங்களை சேர்த்து செய்யும் தோசை, சத்தான மருத்துவ குணம் நிறைந்த காலை உணவாகும். இந்த தோசையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
குதிரைவாலி அரிசி - 1/4 கப்
வரகு அரிசி - 1/4 கப்
சாமை அரிசி - 1/4 கப்
தினை அரிசி - 1/4 கப்
உளுந்து - 1/4 கப்
வெந்தயம் - சிறிது
நுனி கொழுந்து பிரண்டை துண்டுகள் - 13
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
* வரகு, சாமை, தினை, குதிரைவாலி அரிசிகளை ஒன்றாகவும், வெந்தயம், உளுந்தையும் ஒன்றாகவும் 3 மணி நேரம் ஊற வைத்து நன்றாக ஊறியதும் நைசாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
* கணு நீக்கிய பிரண்டையைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி ஆற விடவும். நன்றாக ஆறியவுடன் நன்றாக அரைத்து வரகு அரிசி மாவுடன் கலந்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை தோசையாக ஊற்றி மூடி, இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
* சத்து நிறைந்த பிரண்டை சிறுதானிய தோசை ரெடி.
* பிரண்டை பசி உணர்வை தூண்டும், சிறுதானியங்கள் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குதிரைவாலி அரிசி - 1/4 கப்
வரகு அரிசி - 1/4 கப்
சாமை அரிசி - 1/4 கப்
தினை அரிசி - 1/4 கப்
உளுந்து - 1/4 கப்
வெந்தயம் - சிறிது
நுனி கொழுந்து பிரண்டை துண்டுகள் - 13
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
* வரகு, சாமை, தினை, குதிரைவாலி அரிசிகளை ஒன்றாகவும், வெந்தயம், உளுந்தையும் ஒன்றாகவும் 3 மணி நேரம் ஊற வைத்து நன்றாக ஊறியதும் நைசாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
* கணு நீக்கிய பிரண்டையைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி ஆற விடவும். நன்றாக ஆறியவுடன் நன்றாக அரைத்து வரகு அரிசி மாவுடன் கலந்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை தோசையாக ஊற்றி மூடி, இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
* சத்து நிறைந்த பிரண்டை சிறுதானிய தோசை ரெடி.
* பிரண்டை பசி உணர்வை தூண்டும், சிறுதானியங்கள் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X