search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த பிரண்டை சிறுதானிய தோசை
    X

    சத்து நிறைந்த பிரண்டை சிறுதானிய தோசை

    பிரண்டையுடன் சிறுதானியங்களை சேர்த்து செய்யும் தோசை, சத்தான மருத்துவ குணம் நிறைந்த காலை உணவாகும். இந்த தோசையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - 1/4 கப்
    வரகு அரிசி - 1/4 கப்
    சாமை அரிசி - 1/4 கப்
    தினை அரிசி - 1/4 கப்
    உளுந்து - 1/4 கப்
    வெந்தயம்  - சிறிது
    நுனி கொழுந்து பிரண்டை துண்டுகள் - 13
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப



    செய்முறை :

    * வரகு, சாமை, தினை, குதிரைவாலி அரிசிகளை ஒன்றாகவும், வெந்தயம், உளுந்தையும் ஒன்றாகவும் 3 மணி நேரம் ஊற வைத்து நன்றாக ஊறியதும் நைசாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

    * கணு நீக்கிய பிரண்டையைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி ஆற விடவும். நன்றாக ஆறியவுடன் நன்றாக அரைத்து  வரகு அரிசி மாவுடன் கலந்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை தோசையாக ஊற்றி மூடி, இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.

    * சத்து நிறைந்த பிரண்டை சிறுதானிய தோசை ரெடி.

    * பிரண்டை பசி உணர்வை தூண்டும், சிறுதானியங்கள் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×