என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தினை எள் சாதம் செய்வது எப்படி
Byமாலை மலர்6 March 2017 3:45 AM GMT (Updated: 6 March 2017 3:45 AM GMT)
அதிகளவு சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்களை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. அந்தவகையில் இன்று தினை எள் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எள் - 150 கிராம்,
தினை - ஒன்றரை கப்,
உளுந்தம் பருப்பு - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 6,
வேர்க்கடலை - 50 கிராம்,
உப்பு - சுவைக்கேற்ப,
நல்லெண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க :
கடுகு - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை :
* தினையை, ஒரு கப்புக்கு இரண்டரைப் பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு வேகவைத்து கொள்ளவும். வெந்த தினை சாதத்தை, ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் எள், காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* மற்றொரு கடாயில், நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, வேர்க்கடலையைப் போட்டுத் தாளித்த பின் அதில், தினை சாதத்தைப் போட்டு, எள்ளுப் பொடியைத் தூவி, நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து கிளறி இறக்கவும்.
* சத்து நிறைந்த தினை எள் சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எள் - 150 கிராம்,
தினை - ஒன்றரை கப்,
உளுந்தம் பருப்பு - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 6,
வேர்க்கடலை - 50 கிராம்,
உப்பு - சுவைக்கேற்ப,
நல்லெண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க :
கடுகு - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை :
* தினையை, ஒரு கப்புக்கு இரண்டரைப் பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு வேகவைத்து கொள்ளவும். வெந்த தினை சாதத்தை, ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் எள், காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* மற்றொரு கடாயில், நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, வேர்க்கடலையைப் போட்டுத் தாளித்த பின் அதில், தினை சாதத்தைப் போட்டு, எள்ளுப் பொடியைத் தூவி, நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து கிளறி இறக்கவும்.
* சத்து நிறைந்த தினை எள் சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X