search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் ஸ்டஃப்டு பராட்டா
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் ஸ்டஃப்டு பராட்டா

    பன்னீரில் நம் உடலுக்கு தேவையான நல்ல பல சத்துகள் உள்ளன. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பன்னீரை பயன்படுத்தி பராட்டா செய்வதை இன்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்
    துருவிய பன்னீர் - 1 கப்
    மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
    தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
    கரம் மசாலா - கால் தேக்கரண்டி
    மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
    சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    * கோதுமை மாவை தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.

    * பன்னீரை கேரட் துருவியில் துருவியோ, அல்லது உதிர்த்துக் கொண்டோ அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை கலந்து வைத்து கொள்ளவும். இது தான் பூரணம். இதை சப்பாத்திக்கு உள்ளே ஸ்டஃப்டு செய்ய வேண்டும்.

    * எலுமிச்சையளவு உருண்டைகளாக சப்பாத்தி மாவை உருட்டிக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து மாவைத் தொட்டுக் கொண்டு உள்ளங்கையளவு திரட்டி உள்ளே 1 தேக்கரண்டியளவு பன்னீர் கலவையை வைத்து மூடி மெலிதாக திரட்டிக் கொள்ளவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் திரட்டி வைத்த சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு வாட்டி எடுக்கவும்.

    * சூப்பரான பன்னீர் பராட்டா தயார்.
     
    * ஊறுகாய், மற்றும் தயிருடன் சுவையான பன்னீர் பராட்டா ஜோராக இருக்கும். இதே போல் சீஸ் பராட்டாவும் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×