search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு சத்தான பச்சை பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி
    X

    குழந்தைகளுக்கு சத்தான பச்சை பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி

    காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஒரு காலை உணவு செய்ய நினைத்தால், அதற்கு பச்சை பட்டாணி சப்பாத்தி செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை பட்டாணி - 1 கப்
    கோதுமை மாவு - 1 கப்
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    * இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

    * பச்சை பட்டாணியை கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்த பின், அரைத்து வைத்துள்ள பச்சை பட்டாணி கலவையை சேர்த்து 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் மாங்காய் தூள் சேர்த்து வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    * ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    * பின்னர் அந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் தேய்த்து, நடுவே சிறிது பச்சை பட்டாணி கலவையை நடுவில் வைத்து மூடி, மீண்டும் மெதுவாக சப்பாத்தி போல் தேய்க்க வேண்டும்.

    * தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

    * இப்போது சுவையான பச்சை பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×