search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான ஆனியன் வரகரிசி அடை
    X

    சுவையான ஆனியன் வரகரிசி அடை

    உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஆனியன் வரகரிசி அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகு அரிசி - 1 கப்
    புழுங்கல் அரிசி - 1 கப்
    பாசிபருப்பு - முக்கால் கப்
    துவரம் பருப்பு - கால் கப்
    உளுத்தம் பருப்பு -அரை கப்
    மிளகாய் வற்றல் - 5
    கறிவேப்பிலை - 1 பிடி
    கல் உப்பு - தேவைக்கேற்ப
    பெருங்காயம் - சிறிது

    அடை வார்க்க :

    எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப
    வெங்காயம் - 2
    கொத்துமல்லி - தழை



    செய்முறை :
     
    * வரகு அரிசி, புழுங்கல் அரிசி மற்றும் பருப்பு வகைகளை சுத்தம் செய்து தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊறவிடவும்.

    * வெங்காயம் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    * அரிசி, பருப்பு வகையறாக்கள் நன்கு ஊறிய பின்பு அத்துடன் கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கிரைண்டரில் கொரகொரப்பாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.

    * அடுப்பில் தோசைக் கல் சூடேறியதும் ஒரு கரண்டியாக மாவை எடுத்து ஊற்றி, சிறிது எண்ணெயை சுற்றி ஊற்றி, அதன் மீது பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லியையும் தூவி சுட்டெடுக்கவும்.

    * சூடான சுவையான ஆனியன் வரகரிசி அடை தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×