search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான காராமணி பூர்ண கொழுக்கட்டை
    X

    சத்தான சுவையான காராமணி பூர்ண கொழுக்கட்டை

    புரதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு காராமணி அவசியமான ஒன்று. இன்று காராமணியை வைத்து சத்தான கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொழுக்கட்டை மாவு - 1 கப்,
    உப்பு, எண்ணெய் - சிறிது,
    காராமணிக்காய் - 1/2 கப்,
    தேங்காய் துருவல் - 1/4 கப்,  
    பொட்டுக்கடலைமாவு - 2 டேபிள்ஸ்பூன்,
    பச்சைமிளகாய் விழுது - 1 டேபிள்ஸ்பூன்.

    தாளிக்க:

    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,  
    பெருங்காயத்தூள் - சிறிது.



    செய்முறை :

    * ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சிறிது உப்பு, எண்ணெய் சேர்க்கவும்.

    * கொதிக்கும் நீரில் கொழுக்கட்டை மாவை போட்டு சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கினால் கொழுக்கட்டை மாவு ரெடி.

    * காராமணிக்காயை நன்றாக வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் சிறிது விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் மிளகாய் விழுது, வெந்த அரிந்த காராமணிக்காய், உப்பு சேர்த்து கிளறி தேங்காய்த்துருவல், பொட்டுக்கடலைமாவு தூவி கிளறி இறக்கவும்.

    * விருப்பமான கொழுக்கட்டை அச்சில் மேல் மாவு வைத்து உள்ளே காராமணி பூரணம் வைத்து அடைத்து கொழுக்கட்டை தயார் செய்து ஆவியில் 15 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

    * சத்தான, சுவையான காராமணி பூர்ண கொழுக்கட்டை தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×