என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான சுவையான காராமணி பூர்ண கொழுக்கட்டை
Byமாலை மலர்23 Feb 2017 6:49 AM GMT (Updated: 23 Feb 2017 6:49 AM GMT)
புரதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு காராமணி அவசியமான ஒன்று. இன்று காராமணியை வைத்து சத்தான கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கொழுக்கட்டை மாவு - 1 கப்,
உப்பு, எண்ணெய் - சிறிது,
காராமணிக்காய் - 1/2 கப்,
தேங்காய் துருவல் - 1/4 கப்,
பொட்டுக்கடலைமாவு - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் விழுது - 1 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிது.
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சிறிது உப்பு, எண்ணெய் சேர்க்கவும்.
* கொதிக்கும் நீரில் கொழுக்கட்டை மாவை போட்டு சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கினால் கொழுக்கட்டை மாவு ரெடி.
* காராமணிக்காயை நன்றாக வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் சிறிது விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் மிளகாய் விழுது, வெந்த அரிந்த காராமணிக்காய், உப்பு சேர்த்து கிளறி தேங்காய்த்துருவல், பொட்டுக்கடலைமாவு தூவி கிளறி இறக்கவும்.
* விருப்பமான கொழுக்கட்டை அச்சில் மேல் மாவு வைத்து உள்ளே காராமணி பூரணம் வைத்து அடைத்து கொழுக்கட்டை தயார் செய்து ஆவியில் 15 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
* சத்தான, சுவையான காராமணி பூர்ண கொழுக்கட்டை தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொழுக்கட்டை மாவு - 1 கப்,
உப்பு, எண்ணெய் - சிறிது,
காராமணிக்காய் - 1/2 கப்,
தேங்காய் துருவல் - 1/4 கப்,
பொட்டுக்கடலைமாவு - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் விழுது - 1 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிது.
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சிறிது உப்பு, எண்ணெய் சேர்க்கவும்.
* கொதிக்கும் நீரில் கொழுக்கட்டை மாவை போட்டு சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கினால் கொழுக்கட்டை மாவு ரெடி.
* காராமணிக்காயை நன்றாக வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் சிறிது விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் மிளகாய் விழுது, வெந்த அரிந்த காராமணிக்காய், உப்பு சேர்த்து கிளறி தேங்காய்த்துருவல், பொட்டுக்கடலைமாவு தூவி கிளறி இறக்கவும்.
* விருப்பமான கொழுக்கட்டை அச்சில் மேல் மாவு வைத்து உள்ளே காராமணி பூரணம் வைத்து அடைத்து கொழுக்கட்டை தயார் செய்து ஆவியில் 15 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
* சத்தான, சுவையான காராமணி பூர்ண கொழுக்கட்டை தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X