search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த கீரை மண்டி
    X

    சத்து நிறைந்த கீரை மண்டி

    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று சத்து நிறைந்த கீரை மண்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் ஏதேனும் - 1 கட்டு,
    சின்ன வெங்காயம் - 15,
    தக்காளி - 2,
    பச்சைமிளகாய் - 5,
    பூண்டு - 10 பல்,
    புளி - 50 கிராம்,
    உப்பு - தேவையான அளவு,
    மஞ்சள்தூள் - சிறிது.

    தாளிக்க...

    நல்லெண்ணெய்- 5 டீஸ்பூன்,
    காய்ந்தமிளகாய் - 6,
    கடுகு - 10 கிராம்,
    சீரகம்- 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    * கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளி, பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசி கழுவிய தண்ணீரைத் தெளிய விட்டு, அடியில் தங்கும் மண்டியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்.

    * மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்தமிளகாய் தாளித்து, வெந்த கீரையை சேர்த்து நன்கு மசிக்கவும்.

    * இத்துடன் சிறிது புளிக்கரைசல் மற்றும் மண்டியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.

    * சத்தான கீரை மண்டி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×