search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த கேரட் - கம்பு அடை
    X

    சத்து நிறைந்த கேரட் - கம்பு அடை

    தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சத்து நிறைந்த கேரட், கம்பு வைத்து சுவையான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு - 1 கப்
    புழுங்கல் அரிசி - அரை கப்
    உளுந்து - அரை கப்
    வெந்தயம் - 2 ஸ்பூன்
    துருவிய கேரட் - 1 ஸ்பூன்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    நல்லெண்ணெய் - தேவைக்கு

    செய்முறை :

    * வெங்காயம். ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கம்பு, அரிசி, உளுந்து, வெந்தயத்தை 4 மணிநேரம் ஊற வைக்கவும்.

    * உளுந்து, வெந்தயத்தை தனியாகவும், கம்பு, அரிசியை தனியாகவும் அரைத்து ஒன்றாக கலந்து உப்பு போட்டு 8 மணி நேரம் புளிக்க விடவும்.

    * புளித்த மாவில் வெங்காயம், கேரட், ப.மிளகாய், கொத்தமல்லி போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவு அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    * சத்தான சுவையான கேரட் - கம்பு அடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×