search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    செரிமான கோளாறுகளை போக்கும் கொத்தமல்லி விதை டீ
    X

    செரிமான கோளாறுகளை போக்கும் கொத்தமல்லி விதை டீ

    இந்த டீயை தினமும் பருகி வந்தால் செரிமான கோளாறுகள் சீராகும். வயிற்றுப்புண்ணைப் போக்கும். இப்போது இந்த டீயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொத்தமல்லி விதை - 100 கிராம்,
    ஏலக்காய் - 2,
    பனஞ்சர்க்கரை அல்லது கருப்பட்டி - 2 டீஸ்பூன்,
    பால் - அரை டம்ளர்.

    செய்முறை :

    * தனியாவை வெறும் வாணலியில் வறுத்து, ஆறிய பின் பொடித்து கொள்ளவும்.

    * பாலை கொதிக்க வைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு டீஸ்பூன் தனியா பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    * நன்றாக கொதித்து வரும் போது ஏலக்காய் தட்டிச் சேர்த்து, நன்கு கொதித்ததும் இறக்கி பால், பனஞ்சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்துப் பருகவும்.

    * இந்த டீயை பால் ஊற்றாமல் குடித்தால் மிகவும் நல்லது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×