search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான கேழ்வரகு டோக்ளா
    X

    சத்தான சுவையான கேழ்வரகு டோக்ளா

    குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு டோக்ளா செய்து கொடுக்கலாம். இன்று கேழ்வரகு டோக்ளா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - முக்கால் கப்,
    ரவை - கால் கப்,
    கடலை மாவு - கால் கப்,
    புளித்த தயிர் - அரை கப்,
    ஃப்ரூட் சால்ட்(Fruit Salt) - ஒரு தேக்கரண்டி,
    உப்பு - ருசிக்கேற்ப,
    ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை,
    எண்ணெய் - ஒரு மேஜைக்கரண்டி,
    கடுகு, உளுந்து - தலா கால் தேக்கரண்டி,
    பச்சைமிளகாய் - 2,
    கறிவேப்பிலை - சிறிது,
    தேங்காய்த்துருவல் - 2 மேஜைக்கரண்டி.



    செய்முறை :

    * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ரவையை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கடலை மாவு, வறுத்த ரவை, தேவையான உப்பு, புளித்த தயிர், ஃப்ரூட் சால்ட், ஆப்ப சோடா போட்டு நன்றாக கலக்கி ஒரு மணி நேரம் புளிக்கவிடவும். இட்லி மாவுப் பதத்துக்கு மாவு இருக்க வேண்டும்.

    * ஒரு வட்ட வடிவப் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் துண்டுகளாக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளித்து வேகவைத்த கேழ்வரகு துண்டுகள் மேல் ஊற்றி, தேங்காய்த் துருவல் தூவிப் பரிமாறவும்.

    * சூப்பரான சத்தான கேழ்வரகு டோக்ளா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×