என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான மொச்சை கேழ்வரகு ரொட்டி
Byமாலை மலர்25 Jan 2017 3:25 AM GMT (Updated: 25 Jan 2017 3:25 AM GMT)
கேழ்வரகு அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகுடன் மொச்சை சேர்த்து சத்தான ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ராகி மாவு - 1 கப்,
தண்ணீர் - 2 ¼ கப்,
மொச்சை - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
உப்பு - தேவைக்கு,
வெங்காயம் - 1
புளி - நெல்லிக்காய் அளவு.
தாளிக்க...
கடுகு - 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை :
* மொச்சையை 8 மணி நேரம் ஊறவைத்து வேக வைக்கவும்.
* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புளியை 1/4 கப் தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
* கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து தாளித்த பின், 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
* அடுத்து அதில் புளியை கரைத்து ஊற்றி, உப்பை சேர்க்கவும்.
* தண்ணீர் கொதிக்கும்போது, ராகி மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவி, மிதமான தீயில் கெட்டியாகும் வரை கிளறவும்.
* பிறகு அடுப்பை அணைத்து, வேக வைத்த மொச்சையை ராகி மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.
* ஒரு பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி, சாத்துக்குடி அளவு மாவை எடுத்து போளியை போல் தட்டிக்கொள்ளவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்து வைத்ததை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு சூடாக பரிமாறவும்.
* சத்தான மொச்சை கேழ்வரகு ரொட்டி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ராகி மாவு - 1 கப்,
தண்ணீர் - 2 ¼ கப்,
மொச்சை - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
உப்பு - தேவைக்கு,
வெங்காயம் - 1
புளி - நெல்லிக்காய் அளவு.
தாளிக்க...
கடுகு - 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை :
* மொச்சையை 8 மணி நேரம் ஊறவைத்து வேக வைக்கவும்.
* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புளியை 1/4 கப் தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
* கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து தாளித்த பின், 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
* அடுத்து அதில் புளியை கரைத்து ஊற்றி, உப்பை சேர்க்கவும்.
* தண்ணீர் கொதிக்கும்போது, ராகி மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவி, மிதமான தீயில் கெட்டியாகும் வரை கிளறவும்.
* பிறகு அடுப்பை அணைத்து, வேக வைத்த மொச்சையை ராகி மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.
* ஒரு பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி, சாத்துக்குடி அளவு மாவை எடுத்து போளியை போல் தட்டிக்கொள்ளவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்து வைத்ததை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு சூடாக பரிமாறவும்.
* சத்தான மொச்சை கேழ்வரகு ரொட்டி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X