search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான பசலைக்கீரை பருப்பு சூப்
    X

    சத்தான பசலைக்கீரை பருப்பு சூப்

    அதிகளவு சத்துக்கள் நிறைந்த பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. பசலைக்கீரை, பருப்பு சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக் கீரை - 1 கட்டு
    பயத்தம் பருப்பு - 50 கிராம்
    தண்ணீர் - 500 மி.லி.
    தக்காளிப் பழம்  - 2
    தனியா பொடி - 1 தேக்கரண்டி
    சீரகப்பொடி - அரை தேக்கரண்டி
    வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    பூண்டு - 2 பற்கள்
    வெங்காயம்  - 1
    எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப
    மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
     
    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பசலைக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பருப்புடன் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பின்னர், சூப் வடிகட்டியின் மூலம் வடிகட்டிக் கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் வெண்ணெயை போட்டு உருகியதும் அதில் வெங்காயத்தையும் பூண்டையும் அதில் வதக்கவும்.

    * அடுத்து அதில் பசலைக் கீரையை சேர்த்து வேக வைக்கவும்.

    * அத்துடன் சீரகப்பொடி, தனியா பொடி, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * பின்னர் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    * நன்றாக கொதித்தவுடன் இறக்கி மிளகுத்தூள், எலுமிச்சைப் பழச்சாற்றைச் சேர்க்கவும்.

    * சத்தான பசலைக்கீரை பருப்பு சூப் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×