என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான பசலைக்கீரை பருப்பு சூப்
Byமாலை மலர்11 Jan 2017 7:40 AM GMT (Updated: 11 Jan 2017 7:40 AM GMT)
அதிகளவு சத்துக்கள் நிறைந்த பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. பசலைக்கீரை, பருப்பு சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பசலைக் கீரை - 1 கட்டு
பயத்தம் பருப்பு - 50 கிராம்
தண்ணீர் - 500 மி.லி.
தக்காளிப் பழம் - 2
தனியா பொடி - 1 தேக்கரண்டி
சீரகப்பொடி - அரை தேக்கரண்டி
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பூண்டு - 2 பற்கள்
வெங்காயம் - 1
எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
செய்முறை :
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பசலைக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பருப்புடன் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பின்னர், சூப் வடிகட்டியின் மூலம் வடிகட்டிக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் வெண்ணெயை போட்டு உருகியதும் அதில் வெங்காயத்தையும் பூண்டையும் அதில் வதக்கவும்.
* அடுத்து அதில் பசலைக் கீரையை சேர்த்து வேக வைக்கவும்.
* அத்துடன் சீரகப்பொடி, தனியா பொடி, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* பின்னர் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* நன்றாக கொதித்தவுடன் இறக்கி மிளகுத்தூள், எலுமிச்சைப் பழச்சாற்றைச் சேர்க்கவும்.
* சத்தான பசலைக்கீரை பருப்பு சூப் தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பசலைக் கீரை - 1 கட்டு
பயத்தம் பருப்பு - 50 கிராம்
தண்ணீர் - 500 மி.லி.
தக்காளிப் பழம் - 2
தனியா பொடி - 1 தேக்கரண்டி
சீரகப்பொடி - அரை தேக்கரண்டி
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பூண்டு - 2 பற்கள்
வெங்காயம் - 1
எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
செய்முறை :
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பசலைக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பருப்புடன் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பின்னர், சூப் வடிகட்டியின் மூலம் வடிகட்டிக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் வெண்ணெயை போட்டு உருகியதும் அதில் வெங்காயத்தையும் பூண்டையும் அதில் வதக்கவும்.
* அடுத்து அதில் பசலைக் கீரையை சேர்த்து வேக வைக்கவும்.
* அத்துடன் சீரகப்பொடி, தனியா பொடி, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* பின்னர் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* நன்றாக கொதித்தவுடன் இறக்கி மிளகுத்தூள், எலுமிச்சைப் பழச்சாற்றைச் சேர்க்கவும்.
* சத்தான பசலைக்கீரை பருப்பு சூப் தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X