என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான சுவையான அரைக்கீரை குழம்பு
Byமாலை மலர்7 Dec 2016 8:36 AM GMT (Updated: 7 Dec 2016 8:36 AM GMT)
தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது அரைக்கீரை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
அரைக்கீரை - 1 கட்டு
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
தக்காளி - 4
சின்ன வெங்காயம் - 10
கடுகு - அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* அரைக்கீரையை நன்கு சுத்தம் செய்து கழுவி ஆய்ந்து நறுக்கி கொள்ளவும்.
* பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கொள்ளவும்.
* தக்காளி மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குக்கரில் கீரை, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி அனைத்தையும் போட்டு சிறிது தண்ணீர் விட்டு 3 விசில் வந்ததும் இறக்கி உப்பு சேர்த்து மத்தினால் நன்கு கடைந்து கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் கடைந்து வைத்த கீரை கலவையை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.
* சுவையான, ஆரோக்கியமான “அரைக்கீரை குழம்பு” தயார்.
* இதை சாதத்தோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அரைக்கீரை - 1 கட்டு
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
தக்காளி - 4
சின்ன வெங்காயம் - 10
கடுகு - அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* அரைக்கீரையை நன்கு சுத்தம் செய்து கழுவி ஆய்ந்து நறுக்கி கொள்ளவும்.
* பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கொள்ளவும்.
* தக்காளி மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குக்கரில் கீரை, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி அனைத்தையும் போட்டு சிறிது தண்ணீர் விட்டு 3 விசில் வந்ததும் இறக்கி உப்பு சேர்த்து மத்தினால் நன்கு கடைந்து கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் கடைந்து வைத்த கீரை கலவையை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.
* சுவையான, ஆரோக்கியமான “அரைக்கீரை குழம்பு” தயார்.
* இதை சாதத்தோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X