search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வாய்வு தொல்லையை போக்கும் நாட்டு மருந்து குழம்பு
    X

    வாய்வு தொல்லையை போக்கும் நாட்டு மருந்து குழம்பு

    வாய்வு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த நாட்டு மருந்து குழம்பை வாரம் இருமுறை செய்து சாப்பிட்டு வரலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளை கடுகு - 1 தேக்கரண்டி
    மிளகு - 2 தேக்கரண்டி
    வரமிளகாய் - தேவையான அளவு
    பரங்கி செக்கை - ஒரு நெல்லிக்காய் அளவு
    சுக்கு - சிறிதளவு
    பூண்டு - 50 கிராம்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    புளிக்கரைசல் - 2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - சிறிதளவு
    வெந்தயத்தூள் - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சிறிது தண்ணீர் சேர்த்து புளியை கரைத்து கொள்ளவும்.

    * வெள்ளை கடுகு, மிளகு, காய்ந்த மிளகாய், பரங்கி செக்கை(நசுக்கியது), சுக்கு, பூண்டு இவை அனைத்தையும் நீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    * வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.

    * பின் அதில் கரைத்த புளி கரைசல், உப்பு, மிளகாய்தூள் சேர்த்து நன்றாக கொதித்து ஓரங்களில் எண்ணெய் பிரிவும் போது சிறிதளவு வெந்தயத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கி விடவும்.

    * நல்ல சுவையுடன் கூடிய வாய்வு தொல்லைய நீக்கக்கூடிய குழம்பு ரெடி. இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×