search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் - ஆரஞ்சு சாலட்
    X

    புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் - ஆரஞ்சு சாலட்

    காலையில் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். இப்போது ஆப்பிள் - ஆரஞ்சு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 3
    ஆப்பிள் - 2
    ஆரஞ்சு பழம் - 2
    ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
    ஆரஞ்சு சாறு - 2 ஸ்பூன்
    நறுக்கிய பிஸ்தா பருப்பு - 2 ஸ்பூன்
    இஞ்சி - சிறிய துண்டு
    புதினா - சிறிதளவு
    உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு

    செய்முறை :

    * ஆரஞ்சு பழத்தின் தோலை நீக்கி விட்டு வட்டவடிவமாக வெட்டவும்.

    * கேரட், ஆப்பிளை நீளவாக்கில் வெட்டவும்.

    * இஞ்சி, புதினாவை பொடியாக நறுக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் நறுக்கிய ஆப்பிள், கேரட், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, இஞ்சி, உப்பு, ஆலிவ் ஆயில் போட்டு நன்றாக கலக்கவும்.

    * ஒரு தட்டில் மீது வட்டமாக வெட்டிய ஆரஞ்சு துண்டுகளை அடுக்கி அதன் மேல் கலந்து வைத்து கலவையை அதன் நடுவே வைக்கவும்.

    * அதன் மேல் நறுக்கிய பிஸ்தா பருப்பு, மிளகு தூள், புதினா இலைகளை தூவி பரிமாறவும்.

    * மிகவும் சத்தானது இந்த சாலட்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×