search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான மசாலா முட்டை பன்னீர் புர்ஜி
    X

    சுவையான மசாலா முட்டை பன்னீர் புர்ஜி

    முட்டை புர்ஜி சாப்பிட்டு இருப்பீர்கள். முட்டையுடன் பன்னீர் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 4
    சோம்பு - சிறிதளவு
    வெண்ணெய் - சிறிதளவு
    பன்னீர் - 200 கிராம்
    உப்பு - சுவைக்கு
    முட்டை - 3 (வெள்ளைக்கரு மட்டும்)
    கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    * ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு அது உருகியவுடன் சோம்பு போட்டு தாளித்த பின் அதில் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கிய பின் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * இரண்டும் நன்றாக வதங்கிய பின் துருவிய பன்னீர் சேர்க்கவும்.

    * அடுத்து அதில் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    * பூ போல உதிரியாக வந்ததும் அதில் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

    * சுவையான மசாலா முட்டை பன்னீர் புர்ஜி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×