என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வயதானவர்களுக்கான கோதுமை மாவு புட்டு
Byமாலை மலர்19 Oct 2016 2:16 AM GMT (Updated: 19 Oct 2016 2:16 AM GMT)
வயதானவர்கள், நீரழிவு நோயாளிகள் இந்த கோதுமை புட்டை அடிக்கடி செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 200கிராம்
ஏலக்காய் - 3
தேங்காய் - அரை மூடி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* மாவை சலித்து வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்துக் கொள்ளுங்கள்.
* தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளுங்கள்.
* உப்பை தண்ணீரில் கரைத்து மாவில் தெளித்து உதிரியாகப் பிசையுங்கள். தண்ணீர் அதிகமாக ஊற்றினால் மாவு திரண்டுவிடும். சிறிது சிறிதாக தெளித்துப் பிசைய வேண்டும்.
* புட்டுக் குழாயில் எண்ணெய் தேய்த்து முதலில் தேங்காய் துருவல், அடுத்து கோதுமை மாவு, அடுத்து தேங்காய் துருவல் என மாற்றி மாற்றி வைக்கவும்.
* அடுப்பில் வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கி பரிமாறவும்.
* வாழைப்பழம், பப்படம், வேகவைத்த பச்சைப்பயிறு கலந்தும் பிசைந்து சாப்பிடலாம்.
* நீரழிவு நோயாளிகள், வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் இந்த புட்டு மிகவும் நல்லது. சிறியவர்களுக்கு சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோதுமை மாவு - 200கிராம்
ஏலக்காய் - 3
தேங்காய் - அரை மூடி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* மாவை சலித்து வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்துக் கொள்ளுங்கள்.
* தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளுங்கள்.
* உப்பை தண்ணீரில் கரைத்து மாவில் தெளித்து உதிரியாகப் பிசையுங்கள். தண்ணீர் அதிகமாக ஊற்றினால் மாவு திரண்டுவிடும். சிறிது சிறிதாக தெளித்துப் பிசைய வேண்டும்.
* புட்டுக் குழாயில் எண்ணெய் தேய்த்து முதலில் தேங்காய் துருவல், அடுத்து கோதுமை மாவு, அடுத்து தேங்காய் துருவல் என மாற்றி மாற்றி வைக்கவும்.
* அடுப்பில் வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கி பரிமாறவும்.
* வாழைப்பழம், பப்படம், வேகவைத்த பச்சைப்பயிறு கலந்தும் பிசைந்து சாப்பிடலாம்.
* நீரழிவு நோயாளிகள், வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் இந்த புட்டு மிகவும் நல்லது. சிறியவர்களுக்கு சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X