என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பித்த வாந்திக்கு நிவாரணம் தரும் நார்த்தங்காய் இலை துவையல்
Byமாலை மலர்15 Oct 2016 5:46 AM GMT (Updated: 15 Oct 2016 5:46 AM GMT)
பித்த வாந்தி, வாய் கசப்பு உள்ளவர்கள் நார்த்தங்காய் இலை துவையல் அடிக்கடி செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நார்த்தங்காய் இலை - 20,
கறிவேப்பிலை இலைகள் - 10,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
இஞ்சி - சிறிய துண்டு,
காய்ந்த மிளகாய் - 4,
பச்சை மிளகாய் - ஒன்று,
புளி - கோலிகுண்டு அளவு,
உளுத்தம்பருப்பு - ஒரு கரண்டி,
சீரகம், கடுகு - தலா அரை டீஸ்பூன்,
கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
நார்த்தங்காய் இலைகளின் நடுவில் இருக்கும் காம்பை எடுத்துவிட்டு, பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நார்த்தங்காய் இலைகளை போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாயை போட்டு வதக்கி எடுத்து வைக்கவும்.
* வாணலியில் மறுபடியும் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
* வறுத்த பொருட்கள், வதக்கிய நார்த்தங்காய் இலை, கறிவேப்பிலை, பச்சை மிளகாயுடன் உப்பு, புளி, தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும்.
* சுவையான சத்தான நார்த்தங்காய் இலை துவையல் ரெடி.
* இந்த நார்த்தங்காய் இலை துவையல் பித்த வாந்தி, வாய் கசப்பு போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நார்த்தங்காய் இலை - 20,
கறிவேப்பிலை இலைகள் - 10,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
இஞ்சி - சிறிய துண்டு,
காய்ந்த மிளகாய் - 4,
பச்சை மிளகாய் - ஒன்று,
புளி - கோலிகுண்டு அளவு,
உளுத்தம்பருப்பு - ஒரு கரண்டி,
சீரகம், கடுகு - தலா அரை டீஸ்பூன்,
கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
நார்த்தங்காய் இலைகளின் நடுவில் இருக்கும் காம்பை எடுத்துவிட்டு, பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நார்த்தங்காய் இலைகளை போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாயை போட்டு வதக்கி எடுத்து வைக்கவும்.
* வாணலியில் மறுபடியும் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
* வறுத்த பொருட்கள், வதக்கிய நார்த்தங்காய் இலை, கறிவேப்பிலை, பச்சை மிளகாயுடன் உப்பு, புளி, தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும்.
* சுவையான சத்தான நார்த்தங்காய் இலை துவையல் ரெடி.
* இந்த நார்த்தங்காய் இலை துவையல் பித்த வாந்தி, வாய் கசப்பு போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X