search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான சத்தான தக்காளி கேரட் சட்னி
    X

    சுவையான சத்தான தக்காளி கேரட் சட்னி

    தக்காளி, கேரட்டில் அதிகளவு சத்துக்கள் உள்ளது. தக்காளி, கேரட்டை வைத்து சுவையான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 4
    கடலைப்பருப்பு - 2 மேஜைக்கரண்டி
    சின்ன வெங்காயம் - 10
    இஞ்சி - 2 துண்டு (நறுக்கியது)
    பூண்டு - 5 பற்கள்
    கேரட் - 2 
    தக்காளி - 1
    உப்பு - தேவையான அளவு



    தாளிக்க :

    தேங்காய் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கொத்து

    செய்முறை :

    * தக்காளி, வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்

    * பின்பு வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் கேரட், தக்காளி சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கவும். 

    * வதக்கிய பொருட்களை ஆறவைத்து மிக்சியில் போட்டு நன்கு மிருதுவாக வரும் வரை அரைத்து கொள்ளவும்.

    * அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * சுவையான சத்தான தக்காளி கேரட் சட்னி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×