search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான சத்தான வரகரிசி பிரியாணி
    X

    சுவையான சத்தான வரகரிசி பிரியாணி

    சிறுதானியங்களை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. வரகரிசி பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    வரகரிசி - 100 கிராம்
    கேரட் - 25 கிராம்
    பீன்ஸ் - 25 கிராம்
    பட்டாணி - 25 கிராம்
    வெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 100 கிராம்
    இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 10 கிராம்
    மிளகாய் - 2 கிராம்
    பட்டை, ஏலம் கிராம்பு - சிறிதளவு
    கரம் மசாலா - 5 கிராம்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    * காய்கறிகள், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடானதும் பட்டை, ஏலம், கிராம்பு ஆகியவற்றைப் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய் போட்டு நன்றாக வதக்கிய பின்னர் தக்காளியை போட்டு வதக்கவும். 

    * தக்காளி நன்றாக வதங்கியதும அதில் காய்கறிகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். 

    * அடுத்து அதில் கரம்மசாலா சேர்த்து சிறிது கிளறிய பின்னர் 300 மில்லி தண்ணீரைச் சேர்க்கவும். நன்கு கழுவி களைந்த வரகு அரிசியை அதில் போடவும். 

    * தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரை மூடிவிடவும். 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

    * வரகரிசி பிரியாணி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×