என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பச்சைப் பயறு - கீரை தோசை செய்வது எப்படி
Byமாலை மலர்22 Sep 2016 3:13 AM GMT (Updated: 22 Sep 2016 3:13 AM GMT)
பச்சைப் பயறு, கீரை, கோதுமை மாவு கொண்டு சத்தான தோசையை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சைப் பயறு - 100 கிராம்
கோதுமை மாவு - 50 கிராம்
இட்லி மாவு - 100 கிராம்
முருங்கைக்கீரை - 50 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
சீரகம் - ஒரு டீஸ்பூன்
ப.மிளகாய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பச்சைப் பயறை 2 மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
* அரைத்த பச்சை பயிறு மாவுடன் இட்லி மாவு, கோதுமை மாவு, உப்பு, வெங்காயம், ப.மிளகாய், சீரகம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* அடுத்து அதில் முருங்கைக்கீரையை தனியே வேகவைத்து அரைத்த மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி, எண்ணெய் சேர்த்து, வேகவிட்டு எடுக்கவும்.
* சுவையான சத்தான பச்சைப் பயறு - கீரை தோசை ரெடி.
* முருங்கைக்கீரைக்குப் பதில் சிறுகீரையும் பயன்படுத்தலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X