என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சுவையான சத்தான கேழ்வரகு - புதினா அடை
Byமாலை மலர்9 Sep 2016 5:44 AM GMT (Updated: 9 Sep 2016 5:44 AM GMT)
கேழ்வரகில் அதிகளவு சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்,
இஞ்சி - சிறிதளவு,
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 2 துண்டுகள் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்),
காய்ந்த மிளகாய் - 4,
புதினா - ஒரு கைப்பிடி,
வெங்காயம் - 1
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* வெங்காயம், இஞ்சி, தேங்காய், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், புதினாவை போட்டு சிறிது நேரம் வதக்கி தனியாக வைத்து கொள்ளவும்.
* கேழ்வரகை கல் நீக்கி அரிசியுடன் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* ஊறவைத்த கேழ்வரகு, அரிசியை மிக்சியில் போட்டு அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும்.
* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் வதக்கி வைத்துள்ள வெங்காயம், புதினா, தேங்காய், இஞ்சி, உப்பு, மிளகு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான சத்தான கேழ்வரகு - அரிசி அடை ரெடி.
* உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற அடை இது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேழ்வரகு - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்,
இஞ்சி - சிறிதளவு,
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 2 துண்டுகள் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்),
காய்ந்த மிளகாய் - 4,
புதினா - ஒரு கைப்பிடி,
வெங்காயம் - 1
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* வெங்காயம், இஞ்சி, தேங்காய், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், புதினாவை போட்டு சிறிது நேரம் வதக்கி தனியாக வைத்து கொள்ளவும்.
* கேழ்வரகை கல் நீக்கி அரிசியுடன் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* ஊறவைத்த கேழ்வரகு, அரிசியை மிக்சியில் போட்டு அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும்.
* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் வதக்கி வைத்துள்ள வெங்காயம், புதினா, தேங்காய், இஞ்சி, உப்பு, மிளகு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான சத்தான கேழ்வரகு - அரிசி அடை ரெடி.
* உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற அடை இது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X