search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நோய் பாதிப்பு ஏற்பட்டால் தவிர்க்க வேண்டிய உணவுகள்
    X

    நோய் பாதிப்பு ஏற்பட்டால் தவிர்க்க வேண்டிய உணவுகள்

    உங்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், நீங்கள் சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்கவேண்டும். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?
    உங்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், நீங்கள் சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்கவேண்டும். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?

    * நோய்வாய்ப்பட்டிருக்கும் நேரத்தில் இறைச்சி வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் என்பதால், அப்போது மாமிச உணவுகளை உட்கொண்டால், உடல் நலன் மேலும் பலவீனமாகும்.

    * சளி, இருமல் தொந்தரவு இருந்தால் காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அவை பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும்.

    * நோய்வாய்ப்பட்டிருக்கும்போது காய்கறிவகைகள் எதையும் பச்சையாக சாப்பிடக்கூடாது. சமைத்துதான் சாப்பிடவேண்டும். இல்லாவிட்டால் செரிமான பிரச்சினைகள் ஏற்படும். நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

    * நோய்வாய்ப்பட்டிருக்கும் வேளையில் இனிப்பு வகைகளையும் தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு ஜூஸ் பருகுவதும் கூடாது. ஏனெனில் அதனை ஜூஸாக தயாரிக்கும்போது அதில் அதிக அளவில் சர்க்கரை கலந்துவிடும். அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    * பால் பொருட்களையும் ஒதுக்கிவிடுவது நல்லது. அதிலிருக்கும் கொழுப்புகள் செரிமானத்திற்கு பங்கம் விளைவிக்கும். ஒருசிலருக்கு அலர்ஜியையும் ஏற்படுத்தும்.

    * காபி பருகுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். அதிலிருக்கும் காபின் செரிமான கோளாறுக்கு வித்திடும். சாக்லேட், பிஸ்கெட் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அவை மந்தநிலையை உருவாக்கும்.

    * வேர்க்கடலை உள்ளிட்ட பருப்பு வகைகளையும் சாப்பிடக்கூடாது. அவை சளித்தொந்தரவால் சிரமப் படுபவர்களுக்கு பாதிப்பை அதிகப் படுத்திவிடும்.

    * மதுபானம் அருந்துவதும் கூடாது. அதிலிருக்கும் அமிலத்தன்மையால் வயிற்றுக்கு தொந்தரவு ஏற்படும். நோயை குணப்படுத்தும் மருந்துகளின் வீரியத்தையும் குறைத்துவிடும்.
    Next Story
    ×