search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மூட்டு வலிகளும் அதற்கான நிவாரணமும்
    X

    மூட்டு வலிகளும் அதற்கான நிவாரணமும்

    ஒரு காலத்தில் வயதான பெரியவர்களுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சினை இன்று வயது வித்தியாசம் இல்லாமல் இளம் வயதினருக்கும் ஏற்படக்கூடியதாக உள்ளது.
    மூட்டு வலிகள் இன்று எல்லோருடைய வீட்டிலும் பொதுவாக சொல்லக்கூடிய ஒரு பிரச்சினையாக உள்ளது. ஒரு காலத்தில் வயதான பெரியவர்களுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சினை இன்று வயது வித்தியாசம் இல்லாமல் இளம் வயதினருக்கும் ஏற்படக்கூடியதாக உள்ளது. இந்த மூட்டுவலிகள் எதனால் ஏற்படுகிறது மற்றும் இந்த மூட்டு வலிகளுக்கான அறிகுறிகள் என்ன? என்பதைப் பற்றிப்பார்ப்போம்.

    முதியவர்களை அதிகமாக பாதிக்கும் ஆஸ்டியோ ஆர்த்ரைடீஸ் எனப்படும் சந்திவாதம். இது மூட்டுகளில் உள்ள எண்ணெய் பசைகுறைவினால் வரக்கூடியது. முழங்காலில் உள்ள இணைப்பிலும், எலும்புகளுக்கிடையிலும் ஒரு வித ஜவ்வு இருக்கும். இதற்கு கார்டிலேஜ் என்று பெயர். 

    இந்த ஜவ்வுதான் முழங்கால் மூட்டு தேய்ந்து போகாமல் பாதுகாக்கிறது. முழங்கால் மூட்டும், எலும்பும் ஒன்றோடோன்று உராய்ந்து போகாமல், எளிதில் அசைவதற்கு ஜவ்வு அவசியம் ஒரு வேளை இந்த ஜவ்வு தேய்ந்து போகும் போது தான் வலி உண்டாகிறது. நன்கு உறுதியான மேற்புறமுள்ள இணக்கமான சவ்வு (முழங்கால் மூட்டு இணைப்பின் மீது மிருதுவாக இந்த திசு இருக்கிறது) கிழிந்து விடுதல் மற்றும் நீங்கி விடுவதன் மூலமாக எலும்புகள் சொர சொரப்புடன் ஒன்றுடன் ஒன்று நேரிடையாக உராய்வதால் வலி மற்றும் வீக்கம் ஆகியவை ஏற்படுகிறது.

    அதிகமாக வாகனம் ஓட்டுவதாலோ, ஹார்மோன் கோளாறுகளாலோ இந்த வலி ஏற்படுகிறது. அதிக எடை போட்டாலும் இது சீக்கிரமாக வரலாம். நடக்கும் போது கூட வலி ஏற்படலாம். இந்த நோய் எந்த மூட்டில் வேண்டுமானாலும் வரலாம். உடல் எடையை தாங்கக்கூடிய மூட்டுகள் அதிகமாக பாதிக்கப்படும். படிக்கட்டில் ஏறும் போது இந்த நோயாளிகள் அதிகமாக சிரமத்தை உணர்வார்கள்.

    முடக்குவாதம் என்னும் - ஆமவாதம்

    20 வயது முதல் 50 வயது உள்ளவர்களுக்கு வரலாம். பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தூங்கி எழுந்தவுடன் மூட்டுகளில் இறுக்கமும் - வலியும் கூடுதல் தெரியும். இது வாத நீரில் ஒரு வகை என்று கூட சொல்லலாம். குளிர்ந்த நேரங்களில் அதிக வலி தெரியும்.

    பரம்பரையாகவும், அடிபடுவதாலும், மன உளைச்சலாலும் கூட இது வரலாம். மூட்டுகளை தவிர நுரையீரல், இருதயம், கண்களைக்கூட இதுபாதிக்கும். வயிற்றுக்கோளாறுகள் பிற்காலங்களில் ஏற்படலாம். தோள்பட்டை வலியும், கால் மூட்டுவலியும், மூட்டுகளின் அமைப்பும் மாறிவிடலாம். விரல்கள் வாத்துகழுத்துப்போலவும், கட்டைவிரல் இசட் போலவும் மாறிவிடலாம்.
    குழந்கைளுக்கும் சிறுவர்களுக்கும் 

    வரக்கூடிய மூட்டுவியாதி:-

    16 வயதுக்கும் குறைவாக இருப்பவர்களை தாக்கும். ஒரு மூட்டோ அல்லது பல மூட்டுகளோ பாதிக்கப்பட்டிருக்கலாம். இதனால் வலியும், மூட்டுகளின் இயக்கமும் குறையலாம். மூட்டுகள் சூடாக இருக்கும். ஜூரத்தினாலோ, அடிபட்டதினாலோ, காசநோய், பொன்னுக்கு வீங்கி, ஜெர்மன் அம்மை நோய்கள் வந்த குழந்தைகளுக்கும் இது வரலாம். 6 வாரத்திலிருந்து 3 மாதம் வரை இருக்கலாம். மூட்டுவலியும், கல்லீரல் வீக்கமும், விட்டு விட்டு வரும்.

    இந்த நோயை நிர்ணயம் செய்து தகுந்த மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தாவிட்டால் மூட்டு வலியும், மூட்டு வேலை செய்யாமல் போவதையும் தடுக்க முடியாது. அதனால் 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்கள் ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் பாக்டீரியாவினால் தொண்டை அலர்ஜி ஏற்பட்டு ருமாட்டிக் ஜூரத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். இதனையும். ஆரம்பத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம்.

    மூட்டுகளில் உப்பு நீரால் உண்டாகும் மூட்டுவலி- வாதரக்தம்:-

    மூட்டுவலி யூரிக் அமில மூட்டுவலி யூரிக் அமில படிவுகள் மூட்டுகளின் உள்ளேயும், வெளியேயும் படிவதினால்ஏற்படுகிறது. 70 சதவிகிதம் யூரிக் அமிலம் சிறுநீர் மூலமும், செரிமான உறுப்புகள் மூலமும் வெளியேற்றப்படுகிறது. அதிகமாக வெளியேற்றப்படாமல் இருக்கும் போது வாதரக்தம் ஏற்பட்டு விடுகிறது. 

    அடிபடுவதினாலோ, அதிக மது அருந்துவதாலோ நிறைய அசைவ உணவு வகைகள் சாப்பிடுவதாலோ, இனிப்புரொட்டிகள் சாப்பிடுவதாலோ, காளான்களை உண்ணுவதாலோ, காலிபிளவர்களை சாப்பிடுவ தாலோ உண்டாகலாம், எடை அதிகரிப்பு, பரம்பரை, சுற்றுப்புறசூழ்நிலைகள் முதலியவையும் இதனை உண்டாக்கலாம். 

    பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் போது 40-50 வயதுவரை உள்ளவர்களுக்கும் அதிகம் வாய்ப்புண்டு என்றாலும் எந்த வயதிலும் இது ஏற்படலாம். இது ஆண் களையும் அதிகமாக பாதிக்கிறது. இதற் காக கொடுக்கப்படும் ஆங்கில மருந்துகள் சில சம யங்களில் சுத்தமாக பலனளிக்கமால் போகின்றது. உணவு கட்டுப்பாடு இல்லாமல் எந்த மருந்தும் உதவாது. மூட்டுகளில் அதிக வீக்கமும் இருக்கும். பாரா தைராய்டு சுரப்பிகள் அதிக வேலையும், தைராய்டு சுரப்பிகளின் குறைவான வேலையும் இதற்கு காரணமாக அமையலாம்.

    தொற்றுகிருமிகளால் வரும் மூட்டுவலி :

    பாக்டீரியா, வைரஸ், கொனோரியா, சிபிலீஸ், எயிட்ஸ் போன்ற பல வியாதிகளும், சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களாலும் இந்தமூட்டு வலி உருவாக லாம். மூட்டுவலியும் வீக்கமும் மூட்டைச் சுற்றி சிவந்து காணப்படும். காய்ச்சல், குளிர், பொதுவான உடல்சோர்வு, வலி தோன்றும் நிவாரணி பொருட்கள் பயன்படுத்துபவர்கள், சர்க்கரைநோயாளிகள், சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள், சில வகை புற்று நோய் உள்ளவர்களும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.

    பொன்னுக்கு வீங்கி , ஜெர்மன், மணல் வாரி அம்மை ‘ ஹெபடிடிஸ்-பி’ வைரஸ் போன்றவை களாலும் பாதிக்கப்படும் போது இந்த நோய் மூட்டு களில் வலிகளை உண்டாக்கி பிறகு மூலகாரணமான தொற்று நோய்குணமாகும் போது இதுவும் தானாகவே குணமாகிறது.
    நோய்கிருமிகளும் மூட்டுவலிக்கு காரணமாகலாம். பெண்களை இது அதிகம் பாதிக்கும். தோல், மூட்டுகள் , சிறுநீரகம், முதலியவை இதனால் பாதிக்கப் படுகிறது. பல மூட்டுகளும் பாதிப்படையலாம். முகத்தில் வண்ணத்துப்பூச்சி போன்ற தழும்பு ஏற்படலாம். வெயில் அலர்ஜி, வாய்புண்ணும் இதில் வர வாய்ப்புண்டு.

    தனுர்வாதம் :

    ரத்தப்பரிசோதனை மூலம் கண்டு பிடித்து உறுதிசெய்யப்படும், இந்த நோய் முதுகுவலி, கழுத்துவலியில் ஆரம்பிக்கும் இந்த நோய் முதுகெலும்பில் நடுவிலே இருக்கும். மிக மெல்லிய சவ்வு போன்ற டிஸ்க் எனப்படும் தட்டுபோன்ற ஷாக் அப்சர்வர் போல வேலை செய்யும் அமைப்பை கெடுத்து தடிமனாகி டிஷ்க் சவ்வு கடினமாகி ஒன்றின் மேல் ஒட்டிக்கொண்டு திரும்ப இயலாத அளவுக்கு சிரமத்தை கொடுக்கும் பயங்கரமான வியாதி இது.

    மூட்டு இந்தவலியில் இருந்து விடுபடுவதற்கு பெரும்பாலானவர்கள் அப்போதைய சூழ்நிலையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஏதாவது தற்காலிக வலி நிவாரண மாத்திரைகளை எடுதுதுக்கொள்கிறார்கள். மூட்டுவலியில் இருந்துமுழுமையான நிவாரணம் கிடைப்ப தில்லை. அவர்கள் மூட்டுவலியை தொடர்ந்து அடையும்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    வலியைக் குறைக்க உதவும் வழிகள் :

    வலியை அதிகப்படுத்தும் செயல்களை தவிர்த்து (உதாரணம்- பழுதூக்குதல்) ஓய்வாக இருந்தல். வலி ஏற்படும் இடத்தில் ஐஸ்கட்டிகளை வைக்கலாம். முதல்நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கவும். முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒருநாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.

    கால்முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம். முட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம். சுடுதண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை கலந்து குடித்தல் மற்றும் மோர் உட்கொள்ளுதல் கபம் மற்றும் வாதத்தைக்குறைக்கும்.

    இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது. சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள், வாடா மல்லிகை இலைகள், வேப்பிலைகள், பாகற்காய், கோதுமையில் தயாரிக்கப் பட்ட சப்பாத்தியுடன் பார்லிசேர்த்த உணவுபொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அரிசிசோறு, கொள்ளு, பியஸ் ஆகியவைஉணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    பால், தயிர், பன்னீர், பாலாடையுடன் கூடியகரும்புச் சாறுகுறிப்பாக வெல்லம், சர்க்கரை, பருப்பு, மீன்மற்றும் நறுமணப்பொருள் கொண்ட பொருள்களை உட் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி (வாரத்தில் 4 நாள்களுக்கு 30-லிருந்து 40 நிமிடம் வரை நடக்க வேண்டும்) செய்தல் அவசியம். தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும்.

    ஒரு மேசைகரண்டி ஆயில், ஒருமேசை கரண்டி மாட்டுநெய், அரை மேசைகரண்டி இஞ்சிசாறு, அரைமேசை கரண்டி எலுமிச்சைசாறு மற்றும் சிறிதளவு கரும்புசாறு ஆகியவை சேர்ந்த கலவை வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது.

    இதற்கு மாற்றாக வெதுவெதுப்பான பாலுடன்ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் அதிக செரிமானத்தையும், வாதத்தையும் குறைக்கலாம். 5 கிராம் இஞ்சி கூழுடன்கூடிய ரோஸ்ட், சீரகம், கல்உப்பு, கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி பவுடர் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து உட்கொள்ளுவதால் மூட்டுவலி மற்றும் முதுகுவலி ஆகியவற்றை வெகுவாகக் குறைக்கிறது. போதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து உணவு சமைக்கப்பட வேண்டும். பால், சோறு, மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும்.

    Next Story
    ×