search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் மாதவிடாய் காலங்களில் தியானம் செய்யலாமா?
    X

    பெண்கள் மாதவிடாய் காலங்களில் தியானம் செய்யலாமா?

    பெண்கள் மாதவிடாய் காலகட்டத்தில் யோகாசனங்கள் செய்யக் கூடாது. இதற்காக காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    மாதவிடாய்க் காலத்தில், தான் ஒதுக்கி வைக்கப்பட்டதாகப் பெண் நினைக்க வேண்டியதில்லை. அந்தக் காலகட்டத்தில் பெண்ணுடலில் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள், மனநிலை மாற்றங்கள் நடக்கும். மாதவிடாய் நேரத்தில் யோகாசனங்கள் செய்யக் கூடாது. 

    ஆனால், மூச்சுப்பயிற்சி செய்யலாம். தியானம் செய்யும்போது மாதவிடாய்க் கால வலிகளை மனம் கவனிக்கும். ஹார்மோன் மாற்றங்கள் உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் விளைவுகளையும் புரிந்துகொள்ள முடியும். 

    தியானம் செய்வதால் அந்த நேரச் சிரமங்களை மனம் ஏற்றுக்கொள்ளும். மாதவிடாய்க் காலத்தில் பெரிய அளவில் டென்ஷன் இன்றிக் கடக்க தியானம் பெண்களுக்கு உதவும்.

    Next Story
    ×