search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கழுத்துவலி, தோள்பட்டை வலியை குணமாக்கும் மகா முத்ரா ஆசனம்
    X

    கழுத்துவலி, தோள்பட்டை வலியை குணமாக்கும் மகா முத்ரா ஆசனம்

    மகா முத்ரா ஆசனம் கீழ்முதுகுத் தண்டுவலி, கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    மகா முத்ரா உட்கட்டாசனத்திற்கு மாற்று ஆசனமாகும்.

    செய்முறை :

    முதலில் விரிப்பின் மீது அமர்ந்து கால்களை மண்டியிட்டு பின் வஜ்ராசன நிலைக்குச் செல்ல வேண்டும். கைகளை முதுகின் பின்புறம் படத்திலுள்ளபடி உள்ளங்கையை வெளியில் காட்டியபடி வைத்துக்கொள்ள வேண்டும்.

    முன்புறமாக குனிந்து தலையை தரையில் தொடும்படி குனிய வேண்டும். அப்போது கால் பகுதிக்கு அருகில் கைகள் இருக்க வேண்டும். மூச்சு சாதாரண நிலையில் இருக்கவேண்டும். இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே இவ்வாறு செய்ய வேண்டும்.

    கர்ப்பிணிப் பெண்கள் இவ்வாசனத்தை தவிர்ப்பது நல்லது. முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது.

    பயன்கள்:

    முதுகுத்தண்டு வளைவதால் கீழ்முதுகுத் தண்டுவலி, கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்கும்.

    தொடைப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும். தொப்பையைக் குறைக்க இதுவே சிறந்த ஆசனமாகும். அஜீரணக் கோளாறு நீங்கும். கருப்பை பலப்படும்.
    Next Story
    ×