search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கால்களுக்கு வலிமை தரும் வீரபத்ராசனம்
    X

    கால்களுக்கு வலிமை தரும் வீரபத்ராசனம்

    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கைகள், தோள்பட்டைகள் வலிமை பெறும். இது கால்களுக்கான ஒரு பேலன்ஸ் ஆசனம் ஆகும்.
    செய்முறை: விரிப்பிப்ல கைகள் உடலுக்கு அருகிலும், கால்கள் ஒட்டியபடி நேராக நிற்கவும். இந்த நிலையில்இருந்து, முதலில் இடது காலை முன் பக்கமாக எடுத்துவைக்கவும். வலது பாதத்தைச் சற்று வெளிப்புறமாகத் திருப்பி, தடுமாற்றம் இல்லாமல் நிற்கவும். இதே நிலையில் மூச்சை உள் இழுத்தபடியே இரு கைகளையும் முன்புறமாக உயர்த்தி, தலைக்கு மேல் கொண்டுசென்று, அதே நேரம் முன்புறம் உள்ள காலை மடக்கி, இரு கைகளையும் இணைக்க வேண்டும். இந்த நிலையில் முதுகெலும்பு நன்கு வளையும்.

    வீரபத்ராசனம், முதல் நிலையில் இருந்து மூச்சை வெளியேவிட்டபடி, வலது காலைப் பின்புறமாக மேலே உயர்த்தவும். கைகள் இரண்டும் தோள் அளவில் விரிந்திருக்கும். உடலின் முழு எடையும் இடது காலில் இருக்கும். இந்த நிலையில் இருந்து மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே இரு கைகளையும் தலைக்கு முன்பாக மேல்புறம் ஒன்று சேர்க்கவும். இது வீரபத்ராசனம்-மிமி ஆகும். ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியே விட்டபடி கைகளை, தோள்பட்டை அளவுக்குக் கொண்டுவரவும்.



    இந்த நிலையில் இருந்து வீரபத்ராசனம் முதல் நிலைக்கு, மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே வர வேண்டும். அதே நிலையில் இருந்து மூச்சை வெளியே விட்டபடி, கைகளை முன்புறமாகக் கீழ் இறக்கவும். இடது முட்டியை நேராக்கவும். இது ஒரு முறை.

    இதேபோல் ஆறு முறை இடப்பக்கமும், ஆறு முறை வலப்பக்கமும் செய்ய வேண்டும்.

    பலன்கள்: கால்கள் நன்கு வலுப்பெறுகின்றன. முதுகெலும்பு, பின் வளைந்து இருப்பதால், அது நன்கு பலம் பெறுகிறது. மனம் ஒருநிலைப்படுகிறது. கைகள், தோள்பட்டைகள் வலிமை பெறுகின்றன. இது கால்களுக்கான ஒரு பேலன்ஸ் ஆசனம்
    Next Story
    ×