search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலுக்கு ஓய்வு தரும் ஜெயிஷ்டிகாசனம்
    X

    உடலுக்கு ஓய்வு தரும் ஜெயிஷ்டிகாசனம்

    மன இறுக்கம், கவலையால் அவதிப்படுபவர்களுக்கு ஜெயிஷ்டிகாசனம் நல்ல பலனைத்தரும். இந்த ஆசனம் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
    செய்முறை :

    முதலில் விரிப்பில் குப்புறப்படுத்துக் கொள்ளவும். பின்னர் நெற்றி தரையில் தொடும் படி வைத்து, கைகள் இரண்டையும் விரல்கள் கோர்த்த நிலையில் தலையில் வைத்துக் கைமுட்டிகளை தரையில் தொடும்படி வைக்கவும்.

    பின்னர் கால்கள் நீட்டப்பட்டு, குதிகால்கள் மேல் நோக்க நுனிக்கால்கள் தரையில் இருக்க வேண்டும். மூச்சு சாதாரண நிலையில் இருக்க 3 நிமிடங்கள் இந்நிலையிலிருந்து ஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.

    பலன்கள்:

    * தொப்பையைக் குறைக்கிறது.

    * மன இறுக்கத்தை போக்குகிறது.

    * முதுகு தண்டு வடங்களில் உள்ள கோளாறுகளை அகற்றுகிறது.

    * உடலுக்கு நல்ல ஓய்வைக் கொடுக்கும் ஆசனம் இது.
    Next Story
    ×