என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
இடுப்பு பகுதியை வலுவாக்கும் பார்சுவ கோணாசனம்
Byமாலை மலர்8 April 2017 6:50 AM GMT (Updated: 8 April 2017 6:50 AM GMT)
இந்த ஆசனம் இடுப்பு பகுதியில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைத்து இடுப்பை வலுவடையச்செய்யும். இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை :
விரிப்பில் நேராக நின்று, 3 அடி இடைவெளியில், இரண்டு கால்களையும் விலக்கி நிற்க வேண்டும். வலது காலை வலது பக்கம் திருப்ப வேண்டும். கைகளை பக்கவாட்டில் திருப்ப வேண்டும். இப்போது மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, வலது காலை ‘எல்’ வடிவில் மடக்க வேண்டும்.
பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே வலது பக்கம் சாய்ந்து, வலது கையின் விரல்களை, வலது கால் விரல்களுக்கு இணையாக அருகில் வைக்க வேண்டும்.
பின் மூச்சை இழுத்துக் கொண்டே, இடது கை, இடது காதை அணைத்தவாறு, முழங்கையை மடக்காமல் இருக்க வேண்டும்.
இப்போது முகத்தை சற்று மேல் நோக்கி திருப்ப வேண்டும். இந்த நிலையில், ஆழ்ந்த சுவாசத்தில் சிறிது நேரம் இருந்து, பின் மூச்சை இழுத்துக் கொண்டே சாதாரண நிலைக்கு வர வேண்டும். அடுத்து இதேபோன்று, கால்களை மாற்றி செய்ய வேண்டும். கைகளை தரையில் வைத்து செய்ய முடியாதவர்கள், சற்று உயரத்திற்கு செங்கல் போன்று ஏதாவது வைத்து, அதன் மேல் கைகளை வைத்து செய்யலாம்.
பயன்கள் :
1. இடுப்பு சதை பகுதி குறையும்.
2. ஜீரண மண்டலம் நன்கு தூண்டப்பட்டு, கழிவுகள் முறையாக வெளியேற்றப்படும்.
3. சுவாச மண்டலம் நன்கு வேலை செய்யும்.
விரிப்பில் நேராக நின்று, 3 அடி இடைவெளியில், இரண்டு கால்களையும் விலக்கி நிற்க வேண்டும். வலது காலை வலது பக்கம் திருப்ப வேண்டும். கைகளை பக்கவாட்டில் திருப்ப வேண்டும். இப்போது மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, வலது காலை ‘எல்’ வடிவில் மடக்க வேண்டும்.
பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே வலது பக்கம் சாய்ந்து, வலது கையின் விரல்களை, வலது கால் விரல்களுக்கு இணையாக அருகில் வைக்க வேண்டும்.
பின் மூச்சை இழுத்துக் கொண்டே, இடது கை, இடது காதை அணைத்தவாறு, முழங்கையை மடக்காமல் இருக்க வேண்டும்.
இப்போது முகத்தை சற்று மேல் நோக்கி திருப்ப வேண்டும். இந்த நிலையில், ஆழ்ந்த சுவாசத்தில் சிறிது நேரம் இருந்து, பின் மூச்சை இழுத்துக் கொண்டே சாதாரண நிலைக்கு வர வேண்டும். அடுத்து இதேபோன்று, கால்களை மாற்றி செய்ய வேண்டும். கைகளை தரையில் வைத்து செய்ய முடியாதவர்கள், சற்று உயரத்திற்கு செங்கல் போன்று ஏதாவது வைத்து, அதன் மேல் கைகளை வைத்து செய்யலாம்.
பயன்கள் :
1. இடுப்பு சதை பகுதி குறையும்.
2. ஜீரண மண்டலம் நன்கு தூண்டப்பட்டு, கழிவுகள் முறையாக வெளியேற்றப்படும்.
3. சுவாச மண்டலம் நன்கு வேலை செய்யும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X