என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தொடை மற்றும் குதிகால் தசையை வலுவாக்கும் தடாசனம்
Byமாலை மலர்9 March 2017 6:09 AM GMT (Updated: 9 March 2017 6:09 AM GMT)
மார்பு பகுதி, தொடை மற்றும் குதிகால் தசைகள் வலுவாக்கும் சக்தி தடாசனத்திற்கு உள்ளது. இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தடாசனம் நிலை நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, வலிமையாக்கவும் செய்யும். கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் செய்வதற்கு இது சிறந்த ஆசனம். இந்த ஆசனத்தின் போது மூச்சுப்பயிற்சியின் உதவியினால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
இவ்வாசந்தின் இறுதி நிலை மலைக் குன்று போன்று இருப்பதால் இப்பெயர் பெற்றது.
செய்முறை :
இது பாத ஹஸ்தாசனத்திற்குப் பிறகு செய்யவேண்டிய ஆசனமகும்.
விரிப்பில் இரு கால்களையும் சுமார் பத்து செ.மீட்டர் இடைவெளி விட்டு கைகள் பக்கவாட்டில் தொங்கியவாறு நிற்கவும். மூச்சை இழுத்து கொண்டே குதி கால்களை தூக்க வேண்டும். அதே நேரத்தில் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் உயர்த்தி தலைக்கு மேலே நேராக கொண்டு சென்று உள்ளங்கைகள் ஒன்றோடோண்டு ஒட்டி இருக்குமாறு (வணக்கம் சொல்வது போல்) செய்ய வேண்டும்.
நிலை தடுமாறாமல் சுமார் 20 நொடிகள் அல்லது 30 நொடிகள் சுவாசத்தை நிறுத்தி அதே நிலையில் நிற்கவும்.
மூச்சை வெளி விட்டுக் கொண்டே மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.
பலன்கள் :
மார்பு பகுதி, தொடை மற்றும் குதிகால் தசைகள் வலுப்பெறுகின்றன.
இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆறு மாதவயிற்றுத் தசைகளை சீராக வைத்திருக்க உதவுகிறது.
மார்பு நன்கு விரிவடைகிறது.
இவ்வாசந்தின் இறுதி நிலை மலைக் குன்று போன்று இருப்பதால் இப்பெயர் பெற்றது.
செய்முறை :
இது பாத ஹஸ்தாசனத்திற்குப் பிறகு செய்யவேண்டிய ஆசனமகும்.
விரிப்பில் இரு கால்களையும் சுமார் பத்து செ.மீட்டர் இடைவெளி விட்டு கைகள் பக்கவாட்டில் தொங்கியவாறு நிற்கவும். மூச்சை இழுத்து கொண்டே குதி கால்களை தூக்க வேண்டும். அதே நேரத்தில் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் உயர்த்தி தலைக்கு மேலே நேராக கொண்டு சென்று உள்ளங்கைகள் ஒன்றோடோண்டு ஒட்டி இருக்குமாறு (வணக்கம் சொல்வது போல்) செய்ய வேண்டும்.
நிலை தடுமாறாமல் சுமார் 20 நொடிகள் அல்லது 30 நொடிகள் சுவாசத்தை நிறுத்தி அதே நிலையில் நிற்கவும்.
மூச்சை வெளி விட்டுக் கொண்டே மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.
பலன்கள் :
மார்பு பகுதி, தொடை மற்றும் குதிகால் தசைகள் வலுப்பெறுகின்றன.
இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆறு மாதவயிற்றுத் தசைகளை சீராக வைத்திருக்க உதவுகிறது.
மார்பு நன்கு விரிவடைகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X