என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மன உளைச்சலோடு உடற்பயிற்சி செய்யாதீங்க
Byமாலை மலர்28 Nov 2016 7:19 AM GMT (Updated: 28 Nov 2016 7:19 AM GMT)
கோபமாகவோ அல்லது கவலையாகவோ இருக்கும்போது உடற்பயிற்சி செய்தால், அது மாரடைப்பை ஏற்படுத்துகிறது என சர்வதேச சுகாதார ஆய்வு அறிவித்துள்ளது.
கோபமாகவோ அல்லது கவலையாகவோ இருக்கும்போது உடற்பயிற்சி செய்தால், அது மாரடைப்பை ஏற்படுத்துகிறது என சர்வதேச சுகாதார ஆய்வு அறிவித்துள்ளது.
உடற்பயிற்சி செய்வது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியமான விஷயம்.
அதை கடைப்பிடிப்பவர்கள் தினமும் காலையிலோ, மாலையிலோ அல்லது இரண்டு பொழுதிலுமோ தொடர்ந்து செய்வதை வழக்கமாக்கிக்கொள்கின்றனர்.
இந்நிலையில் அவர்கள் உடற்பயிற்சி செய்யும் நேரங்களில் மனநிலை எப்போதும் ஒரேமாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. அவர்களுடைய குடும்ப மற்றும் அலுவல் ரீதியான பிரச்சினைகளால் மனதில் கோப தாபங்கள், வெறுப்பு, எரிச்சல் ஏற்படுவது இயல்புதான்.
ஆனாலும் அதுபோன்ற நேரங்களிலும் தனது அன்றாட பயிற்சிகளை விட்டுவிடக்கூடாது என அவர்கள் செய்வதும் உண்டு. அதே சமயம் கோபம், எரிச்சலில் உள்ள அவர்கள் மனநிலை உடனடியாக மாறிவிடும் என சொல்ல முடியாது.
இதுபோன்ற சூழ்நிலைகளில் பயிற்சி செய்யலாமா? அப்படி செய்வதால் என்ன நேரும் என 52 நாடுகளில் 12,000 க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், கோபம் மன உளைச்சலோடு பயிற்சி செய்பவர்களுக்கு அடுத்த 1 மணிநேரத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதனால், ஆரோக்கியமற்ற மனநிலை மாறும் வரை, தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடாது என கூறுகின்றனர். அப்படி செய்பவருக்கு அந்த மனநிலையை மும்மடங்கு அதிகப்படுத்தும் அளவிலே உடலின் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுகிறது என கூறுகின்றனர்.
புகை, மதுப்பழக்கம் போல, உடற்பயிற்சிக்கு உளைச்சல் மனநிலையும் பொருந்தாது என கூறும் இந்த கண்டுபிடிப்புகள் அமெரிக்கன் இருதய சங்க இதழில் (American Heart Association Journal) குறிப்பிடப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி செய்வது உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியமான விஷயம்.
அதை கடைப்பிடிப்பவர்கள் தினமும் காலையிலோ, மாலையிலோ அல்லது இரண்டு பொழுதிலுமோ தொடர்ந்து செய்வதை வழக்கமாக்கிக்கொள்கின்றனர்.
இந்நிலையில் அவர்கள் உடற்பயிற்சி செய்யும் நேரங்களில் மனநிலை எப்போதும் ஒரேமாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. அவர்களுடைய குடும்ப மற்றும் அலுவல் ரீதியான பிரச்சினைகளால் மனதில் கோப தாபங்கள், வெறுப்பு, எரிச்சல் ஏற்படுவது இயல்புதான்.
ஆனாலும் அதுபோன்ற நேரங்களிலும் தனது அன்றாட பயிற்சிகளை விட்டுவிடக்கூடாது என அவர்கள் செய்வதும் உண்டு. அதே சமயம் கோபம், எரிச்சலில் உள்ள அவர்கள் மனநிலை உடனடியாக மாறிவிடும் என சொல்ல முடியாது.
இதுபோன்ற சூழ்நிலைகளில் பயிற்சி செய்யலாமா? அப்படி செய்வதால் என்ன நேரும் என 52 நாடுகளில் 12,000 க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், கோபம் மன உளைச்சலோடு பயிற்சி செய்பவர்களுக்கு அடுத்த 1 மணிநேரத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதனால், ஆரோக்கியமற்ற மனநிலை மாறும் வரை, தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடாது என கூறுகின்றனர். அப்படி செய்பவருக்கு அந்த மனநிலையை மும்மடங்கு அதிகப்படுத்தும் அளவிலே உடலின் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுகிறது என கூறுகின்றனர்.
புகை, மதுப்பழக்கம் போல, உடற்பயிற்சிக்கு உளைச்சல் மனநிலையும் பொருந்தாது என கூறும் இந்த கண்டுபிடிப்புகள் அமெரிக்கன் இருதய சங்க இதழில் (American Heart Association Journal) குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X