என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைக்கு காது குத்தும் போது கவனிக்கவேண்டியது
Byமாலை மலர்10 Jan 2018 2:55 AM GMT (Updated: 10 Jan 2018 2:55 AM GMT)
குழந்தைகளுக்கு காது குத்தும் விழாவின் போது, குழந்தைக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
குழந்தைகள் பிறந்த பின் முதலில் பெயர் சூட்டு விழா நடைபெறும். அதன் பின்னர் அவர்களுக்கென நடத்தப்படும் மிக முக்கியமான 2-வது சடங்கு காதணி விழா. இந்த விழாவில், முதல் குழந்தையென்றால், ஆடு வெட்டி, உறவு மற்றும் ஊர்க்காரர்களை அழைத்து விமரிசையாக கொண்டாடுவர். இரண்டாம் குழந்தைக்கு சற்று எளிமையான விதத்தில் கொண்டாடுவர்.
இந்த காதணி விழாவானது குழந்தைக்கு அதிக முடியிருந்தால், 3-வது மாதமே நடத்தப்படும். இல்லையேல் 5, 7, 11-வது மாதம் என ஒற்றையிலக்க மாதங்களில் நடத்தப்படும். ஆகவே, இந்த முக்கிய விழாவின் போது, விழாவிற்கான ஏற்பாடுகளுடன், குழந்தைக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி, காதணி விழாவின் போது, குழந்தைகளிடம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன.
காது குத்துமிடம் சுத்தமாக இருக்கிறதா என நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும். காது குத்துவது சரியாக செய்யப்படவில்லை எனில், அது அப்பச்சிளம் குழந்தைகளுக்கு அதிக வலியை ஏற்படுத்தும். காது குத்துமிடத்தை தரமான ஆன்டிசெப்டிக்கைப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.
குழந்தைகள் அணிந்திருக்கும் கம்மல் மற்றும் தோடுகளை இழுப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி அவர்கள் செய்துவிட்டால், அது அவர்களுக்கு மிகுந்த வலி மற்றும் வேதனையினை கொடுக்கும். எனவே, குழந்தைகள் கம்மலை இழுத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் தலையாய கடமையாகும்.
குழந்தைகள் அணிந்திருக்கும் கம்மல், தோடுகளை தொடர்ச்சியாக அணிய வேண்டும். காது குத்தும் கருவி சுத்தமாக இல்லை எனில், காது குத்தப்பட்ட இடத்தில் கிருமிகள் தாக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் அவர்கள் அணியக்கூடிய காதணிகள் தரமாக இல்லை என்றாலும், இதுபோன்று கிருமிகள் தாக்க வாய்ப்புள்ளது. குழந்தைக்கு இரும்பு போன்றவற்றால், ஒவ்வாமை ஏற்படுமானால் அவ்வொவ்வாமை, இதுபோன்ற காதணிகளை அணிவித்தால், அச்செயல் உங்கள் குழந்தையை பாதிக்கலாம். குழந்தைகளின் காதணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது கூடாது.
சில சமயங்களில், காது குத்திய இடத்தில் சிறு தழும்புகள் அல்லது தடுப்புகள் வர வாய்ப்புகள் உள்ளன. இது சில நாட்களில் தானாகவே நீங்கிவிடும். ஆனால் இது பல பெரும் பிரச்சினைக்கு காரணமாக அமையலாம். பெரும்பாலும் காது குத்தும் இடத்தில், கட்டி இருந்தால் இப்பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் காது குத்தும்போது கட்டி இருந்தால் அவ்விடத்தை தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் மருத்துவமனைகளில் இதனை செய்வது நல்லது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X