என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளின் பார்வைத்திறனை சோதிக்கும் முறைகள்
Byமாலை மலர்28 Dec 2017 5:52 AM GMT (Updated: 28 Dec 2017 5:52 AM GMT)
ஒவ்வொரு தாயும் குழந்தைகளின் பார்வை விஷயத்தில் மிகவும் அக்கறையுடன் இருந்தால் பார்வை இழந்த குழந்தைகளுக்கு மீண்டும் பார்வையை கொடுக்க முடியும்.
ஒவ்வொரு தாயும் குழந்தைகளின் பார்வை விஷயத்தில் மிகவும் அக்கறையுடன் இருந்தால் பார்வை இழந்த குழந்தைகளுக்கு மிகவும் இலகுவாக மீண்டும் பார்வையை கொடுக்க முடியும். குழந்தை பிறந்து ஒன்று அல்லது இரண்டு மாததிற்குப் பின்னர் அதன் பார்வையை ஒரு தாயால் பரிசோதிக்க முடியும்.
உங்கள் குழந்தை உங்கள் முகத்தைப் பார்த்து சிரிக்கின்ற அதே வேளை ஏதாவது வெளிச்சத்தைக் காட்டும் போது அதனை நோக்கிப் பார்க்கின்றதா? என்பது தான் முதல் பரிசோதனை.
அத்துடன் ஒரு பொருளை சத்தம் செய்யாமல் அதன் கண்களில் தெரியும் படி காட்டி, குறிப்பிட்ட ஒரு திசையை நோக்கி கொண்டு செல்லும்போது அப்பொருளை நீங்கள் காட்டும் திசையை நோக்கி திரும்பி பார்க்கின்றதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஏன் பொருளை சத்தம் செய்யாமல் காட்ட வேண்டும் என்றால், சிலவேளைகளில் சத்தத்தினை செவிமடுத்து சத்தம் வருகின்ற திசையை நோக்கி கூட அது பார்க்கலாம், அதனை கொண்டு நாம் குழந்தையின் பார்வை சரியாக இருக்கின்றது என்ற தீர்மானத்திற்கு வர முடியாது.
இது குழந்தை பிறந்து சுமார் இரண்டு மாதத்திற்குப் பின்னர் நீங்கள் அவர்களின் பார்வை தொடர்பாக செய்ய வேண்டிய சோதனைகள். இச்சோதனைகளை செய்யும்போது குழந்தைகளின் பார்வையில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக கண் வைத்தியரை நாடுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X