search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெற்றோர்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் எதிர்பாராத ஆபத்துகள்
    X

    பெற்றோர்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் எதிர்பாராத ஆபத்துகள்

    பெற்றவர்கள், அவர்கள் அறியாமலேயே செய்கிற சில தவறுகளால், பிள்ளைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அவை என்னென்ன பார்க்கலாம்.
    பெற்றவர்கள், அவர்கள் அறியாமலேயே செய்கிற சில தவறுகளால், பிள்ளைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அவை என்னென்ன தவறுகள் என்று தெரிந்துகொண்டால் அவற்றைத் தவிர்க்கலாமே... 

    * குழந்தைகளுடன் நடந்துபோகையில், அவர்கள் எப்போதும் நம் வலது கையைப் பிடித்துக்கொண்டே நடக்கப் பிரியப்படுவார்கள். நம்முடைய வலது பக்கம், எப்போதும் வண்டிகள் போகும் சாலையின் பக்கமாக இருக்கும். அந்தக் கையால் பிள்ளை பிடித்துக்கொண்டு நடந்தால், முட்டுச்சந்தில்கூட பைக் ரேஸாக வண்டியை முறுக்கும் பையன்களால் ஆபத்து ஏற்படும். 

    * டூ வீலரில் செல்லும்போது... ஸ்கூலுக்கு லேட்டாகி, பிள்ளையைச் சரியான நேரத்தில் விடவேண்டும் என ஆக்ஸிலேட்டரை முறுக்குவார்கள் சில அப்பாக்கள். இதுபோன்ற சமயங்களில் டூ வீலரில் ஹெல்மெட் போன்ற எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பயணிக்கும் குழந்தையின் நிலை ஆபத்தை உண்டாக்கும். 



    * காரில் போகும்போது... சீட் பெல்ட் போடாமல் குழந்தைகளை அழைத்துச் செல்லுதல், பத்தே நிமிடத்தில் ஷாப்பிங்கை முடித்துவிடலாம் என்று குழந்தையை காரிலேயே விட்டுச்செல்லுதல் இரண்டுமே குழந்தைக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம்... குழந்தையை காரில் விட்டுச்செல்கிற நேரத்தில், அவை காரின் ஏ.சி.யை அணைத்துவிட்டாலோ, ஏ.சி.யில் ஏதேனும் பிரச்னை வந்தாலோ, காருக்குள் சூடு அதிகமாகி, குழந்தை மூச்சுத்திணறி இறக்க நேரிடலாம். 

    * இன்றைய குழந்தைகள் எல்லா விஷயங்களையும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். சமையலும் இதற்கு விதிவிலக்கில்லை. நீங்கள் சமைக்கும்போது, பிள்ளைகள் சமையல் மேடையில் ஏறி, நானும் சமைக்கிறேன் என்று அடம்பிடிக்கும். குழந்தை ஆர்வமாகக் கேட்கிறதே என்று விளையாட்டாகச் சொல்லிக்கொடுப்போம். இது, நம் கண் முன்னால் நடப்பதோடு நிற்குமா? நாம் இல்லாத நேரத்தில் நடந்தால்... எனவே, கிச்சனுக்குள் அனுமதிக்க வேண்டாம். 
    Next Story
    ×