என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளின் ‘திரை நேரத்தை’ குறைக்க அறிவுரை
Byமாலை மலர்10 Jun 2017 4:44 AM GMT (Updated: 10 Jun 2017 4:44 AM GMT)
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மின்னணுத் திரைக்கு முன்னால் செலவிடும் நேரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மின்னணுத் திரைக்கு முன்னால் செலவிடும் நேரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என்று கனடா குழந்தைகள் நல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அழுகின்ற அல்லது அடம்பிடிக்கின்ற குழந்தைகளிடம் செல்போனை கொடுத்துவிடுவது பல பெற்றோரின் வழக்கமாக இருக்கிறது. கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள், கணினி அல்லது ‘டேப்’பில் வீடியோ கேம்களில் ஆழ்ந்துவிடுகின்றனர்.
அவ்வாறு அவர்களை மின்னணுத் திரை முன் அதிக நேரத்தைக் கழிக்க விடுவது தவறு என்று கனடா மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்குப் பதிலாக வேறு விளையாட்டுகளிலும், குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதற்கும் அவர்களை அறிவுறுத்த வேண்டும் என்கின்றனர்.
இரண்டில் இருந்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தினமும் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக மின்னணுத் திரைகளில் கழிக்கும் வகையில் கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மின்னணுத் திரைகளைப் பார்ப்பதை ஊக்குவிக்காமல் இருப்பது சிறந்தது எனவும் கூறப்படுகிறது.
அதோடு, இரவு படுக்கைக்குப் போவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே திரைகளை அணைத்துவிட வேண்டும்.
மொழி மற்றும் ஆக்கச்சிந்தனை, சுறுசுறுப்பான விளையாட்டுகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிப்பது போன்றவற்றில் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும்.
அத்துடன், குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைப்பதை விட வெளியில் விளையாட விடுவது நல்லது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
முடியும்போது, வயதுக்குப் பொருத்தமான, அறிவுசார்ந்த திரைக்காட்சிகளைக் காண்பதற்கும், அவை குறித்த நுணுக்கமான கேள்விகளைக் கேட்பதற்கும் குழந்தைகளைப் பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் என்று கனடா மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அழுகின்ற அல்லது அடம்பிடிக்கின்ற குழந்தைகளிடம் செல்போனை கொடுத்துவிடுவது பல பெற்றோரின் வழக்கமாக இருக்கிறது. கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள், கணினி அல்லது ‘டேப்’பில் வீடியோ கேம்களில் ஆழ்ந்துவிடுகின்றனர்.
அவ்வாறு அவர்களை மின்னணுத் திரை முன் அதிக நேரத்தைக் கழிக்க விடுவது தவறு என்று கனடா மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்குப் பதிலாக வேறு விளையாட்டுகளிலும், குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதற்கும் அவர்களை அறிவுறுத்த வேண்டும் என்கின்றனர்.
இரண்டில் இருந்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தினமும் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக மின்னணுத் திரைகளில் கழிக்கும் வகையில் கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மின்னணுத் திரைகளைப் பார்ப்பதை ஊக்குவிக்காமல் இருப்பது சிறந்தது எனவும் கூறப்படுகிறது.
அதோடு, இரவு படுக்கைக்குப் போவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே திரைகளை அணைத்துவிட வேண்டும்.
மொழி மற்றும் ஆக்கச்சிந்தனை, சுறுசுறுப்பான விளையாட்டுகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிப்பது போன்றவற்றில் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும்.
அத்துடன், குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைப்பதை விட வெளியில் விளையாட விடுவது நல்லது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
முடியும்போது, வயதுக்குப் பொருத்தமான, அறிவுசார்ந்த திரைக்காட்சிகளைக் காண்பதற்கும், அவை குறித்த நுணுக்கமான கேள்விகளைக் கேட்பதற்கும் குழந்தைகளைப் பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் என்று கனடா மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X