search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் உணர்வுபூர்வமான பிரச்சனைகளை கண்டறியும் விளையாட்டு சிகிச்சை
    X

    குழந்தைகளின் உணர்வுபூர்வமான பிரச்சனைகளை கண்டறியும் விளையாட்டு சிகிச்சை

    விளையாட்டுச் சிகிச்சை அளிக்கும் ஒருவர் குழந்தையிடம் நேரடியாக “உனக்கு என்ன பிரச்சனை” என்று கேட்காமல், மறைமுகமான அணுகுமுறையில் அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்கிறார்.
    விளையாட்டுச் சிகிச்சை குழந்தைகளின் உணர்வுபூர்வமான பிரச்சனைகளை கண்டறியவைத்து அவைகளை நல்ல முறையில் சமாளிக்க அவர்களுக்கு உதவுகிறது. பெரியவர்களுக்கு ஏதேனும் உணர்ச்சிப் பிரச்சனை வந்தால் அவர்களால் அதை ஓரளவு சிறப்பாகக் கையாள இயலும். காரணம் அவர்களுக்கு தங்களுக்கு ஏதோ பிரச்சனை என்று பெருமளவு புரிந்துவிடும்.

    அந்த உணர்வுகளை அவர்கள் பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் இயலும். அதன்மூலம் அவர்களது பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குழந்தைகளுக்கு உணர்வுப் பிரச்சனைகள் வரும்போது அவர்களால் அதை புரிந்துகொள்ளவும் இயலாது, வெளிப்படையாக சொல்லவும் இயலாது. ஆகவே அவர்களுக்கு விளையாட்டுச் சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது.

    குறிப்பாக, மிகவும் இளைய வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு இது ஒரு மிக நல்ல சிகிச்சை ஆகும். சில குழந்தைகளால் தங்கள் மனதில் உள்ளதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாமல் போகலாம், சிலர் வெட்கப்படலாம், சிலர் தங்களுடைய பிரச்சனைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் அசௌகரியம் அடையலாம். அதுபோன்ற நேரங்களில் விளையாட்டைப் பயன்படுத்தி அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பது சாத்தியமாகிறது. இது குழந்தைகளுக்கு இயல்பாகவே வரும் ஒரு விஷயம் என்பதால், இது ஒரு நல்ல சிகிச்சை ஆகிறது.

    விளையாட்டுச் சிகிச்சை என்பது ஒருவிதமான உளவியல் சிகிச்சை. இங்கே குழந்தைகள் தங்களுடைய உணர்வு மற்றும் மனநலப் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதற்கும், அவற்றைக் கையாள்வதற்கும் விளையாட்டு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகள் தங்களுடைய உணர்வுகளை தாங்களே அலசுகிறார்கள், அதை சிகிச்சையாளர் அல்லது தங்களது பெற்றோரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    ''சிறுவர்களை விடுங்கள் பெரியவர்களாகிய நமக்கே கூட நமது மனதில் உள்ளதை பேசுவது சிரமமாக உள்ளது அல்லவா? இந்தப் பிரச்சனை சிறுவர்களுக்கு இன்னும் பல மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது,.



    ''விளையாட்டு என்பது மனிதர்களுக்கு ஒரு மிகவும் இயல்பான விஷயமாக இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் இதனை மிகவும் ரசிக்கிறார்கள். விளையாடும்போது அவர்கள் எந்தவிதமான அசௌகரியத்தையும் உணர்வதில்லை. ஆகவே விளையாட்டை ஓர் இயற்கையான வழியாகப் பயன்படுத்தி ஒரு குழந்தையை தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தச் செய்யலாம். குழந்தைகளே பதில் தேட வைக்கலாம். அவ்வளவு என் குழந்தைகளை விளையாட விட்டாலே போதும். அதுவே அவர்களுக்கு நல்ல மாற்றமாக அமைந்து அவர்கள் பிரச்சனைகளைக் குறைக்கும்.

    வாழ்க்கை நல்ல அனுபவமாக அமைந்து விளையாட்டாகப் பார்க்கும்போது விளையாட்டின் மூலம் தங்களுடைய உணர்வுகளை அலசும்போது, குழந்தைகள் தங்களுடைய பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பான தொலைவிற்கு விலகி நிற்கப் பழகுகின்றன. அதன் மூலம் அவற்றை ஜீரணித்துக்கொள்கிறார்கள், பிறர் தங்கள் மீது தீர்ப்புச் சொல்கிறார்களே, தங்களை மாறச் சொல்கிறார்களே, என்றெல்லாம் உணராமல் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று அவர்களே சிந்திக்கிறார்கள்.''

    “விளையாட்டுச் சிகிச்சையைப் பொறுத்தவரை முழு கவனமும் குழந்தைகளின் மேல் தான் இருக்கும். அவர்களுக்கு எது சிறந்ததோ அதன் மீது தான் இருக்கும்” என்கிறார் அவர். இந்தச் சிகிச்சையை வழிநடத்துவது சிகிச்சை பெறுகிற குழந்தையேதான். இதை கட்டுப்படுத்துவதற்கு முழுச் சுதந்திரமும் குழந்தைகளுக்குத் தரப்படுகிறது, அவர்களுக்கு எது மனத்துயர் உண்டாக்குகிறது என்பதை அவர்களே கண்டறிந்து, அவர்களே சரி செய்து கொள்வார்கள், இந்தச் சிகிச்சை எந்த வேகத்தில் நடைபெறும், எந்த ஊடகத்தில் நடைபெறும், என்பதையெல்லாம் தீர்மானிக்கப்போவது அவர்கள்தான். இது அவர்களுக்கு மிக நல்ல பலனைத் தருகிறது.”

    விளையாட்டுச் சிகிச்சை அளிக்கும் ஒருவர் குழந்தையிடம் நேரடியாக “உனக்கு என்ன பிரச்சனை” என்று கேட்காமல், மறைமுகமான அணுகுமுறையில் அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்கிறார். மற்ற உளவியல் மதிப்பீடுகளோடு விளையாட்டுச் சிகிச்சையையும் பயன்படுத்தலாம். சில நேரங்களில் விளையாட்டுச் சிகிச்சை அளிப்பவர் அதன்மூலம் கலையையும் பயன்படுத்தலாம். அதன்மூலம், குழந்தையின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரலாம். மூன்று வயது மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த விளையாட்டுச் சிகிச்சையை பயன்படுத்தலாம்.
    Next Story
    ×