search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு ஏற்படும் சோம்பேறி கண்ணின் அறிகுறிகள்
    X

    குழந்தைகளுக்கு ஏற்படும் சோம்பேறி கண்ணின் அறிகுறிகள்

    சோம் பேறி கண் என்பது குழந்தை பருவத்தில் ஏற்படும் பாதிப்பு. கண்ணின் பார்க்கும் திறன் எந்த அளவு இருக்க வேண்டுமோ அந்த அளவு உருவாகாமல் இருப்பதனை இவ்வாறு குறிப்பிடுகின்றோம்.
    இப்படி ஒரு தலைப்பை படித்தால் என்ன இது? நாம் தான் சோம்பேறியாக இருக்கின்றோம். நம் உடல் உறுப்புகள் அதிலும் குறிப்பாக துறுதுறுப்பாக இருக்கும் கண்கூட சோம்பேறியாக இருக்குமா என்ன? என்று ஆச்சரியப்பட வைக்கும். கலி காலத்தில் இப்படியெல்லாம் கூட நோய் பாதிப்புகள் வருமா என்று திகைக்க வேண்டாம். இவையெல்லாம் எப்பொழுதும் இருந்து வரும் பாதிப்புகள்தான். அதிகம் அறியப்படாததாக இருக்கலாம். இன்று இதனை அறிவோம்.

    சோம் பேறி கண் என்பது குழந்தை பருவத்தில் ஏற்படும் பாதிப்பு. கண்ணின் பார்க்கும் திறன் எந்த அளவு இருக்க வேண்டுமோ அந்த அளவு உருவாகாமல் இருப்பதனை இவ்வாறு குறிப்பிடுகின்றோம். பொதுவில் இது ஒரு கண்ணில்தான் தாக்கத்தினை ஏற்படுத்தும். ஆனால் சில சமயங்களில் இரு கண்களிலும் இந்த பாதிப்பு ஏற்படலாம். இந்த பாதிப்பு ஏற்படும் பொழுது மூளை ஒரு கண்ணில் அதிக அதிக கவனத்தினையும் மற்றொரு கண்ணில் கவனமின்மையுமாக இருக்கும். பாதிப்படைந்த கண்ணை தூண்டி விடாவிடில் கண்பார்வைக்கான மூளையிலுள்ள செல்கள் முழுமையாக வளர்ச்சி பெறாமல் இருந்து விடும். 2&5 சதவீத குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

    இதனால் பார்வை குறைபாடோ அல்லது முழு பார்வையின்மையோ ஏற்படுகின்றது. ‘சோம் பேறி கண்’ என்று இங்கு சொல்வதைக் காட்டிலும் சோம்பேறி மூளை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஏனெனில் வளர்ச்சி பிரச்சினை மூளையில்தான் ஏற்படுகின்றது.

    சோம்பேறி கண்ணின் அறிகுறிகள் :

    இப்பாதிப்பு இருக்கும் குழந்தைக்கு ஒரு கண்ணில் கவன ஈர்ப்பு இருக்காது. இது பாதிப்புள்ள கண். நன்றாக உள்ள கண் இந்த மறு கண்ணுக்காக தானே முயன்று சீர் செய்யும். பாதிப்புள்ள கண்ணில் முறையான தெளிவான பிம்பம் இராது. மூளையினால் இதனை சரியாக செயல்படுத்த முடியாமையினால் இதனை ஒதுக்கி விடும். சரியான கண்ணைக் கொண்டு மூளை பார்வை திறனை முழுமைபடுத்த முயலும். ஆகையால் அக்குழந்தைக்கு தனது ஒரு கண்ணில் பாதிப்பு இருப்பது தெரியாது. ஆகவேதான் இதனை பெற்றோர்களால் முதலில் கண்டு பிடிக்க முடிவதில்லை. முறையான கண்பரிசோதனை செய்யும் நேரத்திலேயே இக்குறைபாடு கண்டுபிடிக்கப்படும்.

    * மங்கலான பார்வை
    * இரட்டை பார்வை
    * முழுமை பெறாத பார்வை
    * இரு கண்களும் ஒரு போல இயங்காமை.
    * மாறுகண்.

    போன்றவை அறிகுறிகளாகத் தெரியும். ஒரு குழந்தைக்கு 3&5 வயதுக்குள் முதல் கண் பரிசோதனை அவசியம். பரம்பரையில் ஏதேனும் கண்பாதிப்பு இருக்குமாயின் இளவயதிலேயே கண் பரிசோதனை அவசியம். குழந்தை பிறந்த சில வாரங்களுக்குப் பிறகு கண்களில் மாறுபாடு தெரிந்தால் உடனடி கண் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

    இந்த குறைபாடு ஏன் ஏற்படுகின்றது

    * கண் தசைகளில் இயக்க குறைபாடு காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுகின்றது.
    * கண் நோய்
    * கண்ணில் புண்
    * இறங்கும் இமை
    * கண் அழுத்தம்
    * கண்ணில் காயம்
    * கண் அறுவை சிகிச்சை பாதிப்பு

    இவற்றின் காரணமாக இப்பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆறுவயதிற்குள்ளாக இப்பிரச்சினையை கண்டு பிடிப்பதே சிறந்தது.

    சிகிச்சை முறை:

    * பாதிப்பிற்குண்டான காரணத்தினை கண்டு பிடித்தல்
    * பாதிப்படைந்த கண்ணிற்கு பயிற்சி கொடுத்து முன்னேற்றுதல்.
    * கண்ணாடி அணிய தேவை இருக்கலாம்.

    * கண் திரை இருப்பின் அதனை நீக்கி மாற்று லென்ஸ் வைக்க வேண்டி இருக்கலாம்.
    * இறங்கும் இமையினை அறுவை சிகிச்சை மூலம் சீர் செய்யலாம்.

    இதற்கான சிகிச்சை முறைகள் இன்று மருத்துவ முன்னேற்றத்தில் நிறைய உள்ளன. அவைகளை கண் மருத்துவர் ஆலோசனை மூலமே பெற வேண்டும்.

    * சிகிச்சை மிக அவசியம். இல்லையெனில் பாதிப்புடைய கண்ணின்
    * பார்வையினை முழுமையாக இழக்கும் ஆபத்து உள்ளது.
    * பாதிப்புடைய கண்ணால் மாறுகண் ஏற்படலாம்.
    * பார்வை கோளாறு ஏற்படலாம்.

    சோம் பேறி வயிறு :

    இப்படி சொல்லப்படும் வயிறு உள்ளவர்கள் மிக சிறிதளவு உண்டாலே வயிறு நிறைந்து விட்டது என்பர். அவர்களுக்கு ஆசிட் எதிர்ப்பு, வயிற்று வலி, வயிறு உப்பிசம், வாந்தி போன்றவை இருக்கும்.

    சில வயிறுகள் வயிற்றில் உள்ளதை காலி செய்ய நேரம் பிடிக்கும் வயிற்றின் சதைகளோ, வயிற்றை கட்டுப்படுத்தும் வேகஸ் நரம்போ பாதித்து இருந்தால் வயிற்றினால் உணவை சிறு குடலுக்கு உரிய நேரத்தில் அனுப்ப முடியாது. இத்தகை யோருக்கு சிறிய அளவில் உணவு உட்கொண்டாலே வயிறு நிரம்பியது போல் இருக்கும்.

    இதை விட பெரிய பிரச்சினை அவர்களுக்கு ‘அசிடிடி’ தொல்லை அதிகமாக இருக்கும். சிலருக்கு உணவு அப்படியே தங்கியிருப்பதால் வயிற்று வலி அதிகமாக இருக்கும். இது நீரிழிவு நோயாளிகளிடம் அதிகமாகக் காணப்படும். மேலும் குறைவான தைராய்டு சுரக்கும் பிரச்சினை உடையோருக்கும் இப்பிரச்சினை இருக்கலாம். இத்தகு பிரச்சினை உடையவர்கள் குறைந்த அளவு கொழுப்பு உள்ள உணவுகளை பரிந்துரைக்கின்றனர். திரவ உணவும் இவர்களுக்கு பரிந்துரைக்கப்படும்.

    சோம் பேறி வயிற்றின் அறிகுறிகள் :

    * வயிறு உப்பிசம்
    * வயிற்றுப் பிரட்டல்
    * செரிமானமாகாத உணவினை வாந்தி எடுத்தல்
    * நெஞ்செரிச்சல்

    * சிறிது உண்டாலே அதிகம் உண்டது போன்ற உணர்வு
    * சர்க்கரை குறைந்து இருத்தல் (அ) சர்க்கரை அதிகம் இருந்தல் (நீரிழிவு நோயாளிகளுக்கு)
    * ஏன் என்று தெரியாத எடை குறைவு

    * வயிற்றில் காற்று
    * மேல் வயிற்று வலி
    * பசியின்மை
    * வயிறு இழுத்து பிடித்து வலித்தல்
    * அசிடிடி எதிர்ப்பு

    ஆகியவை ஆகும்.

    சோம்பேறி வயிறு உருவாகக் காரணங்கள் :


    * நீரிழிவு நோய் தான் முதல் காரணம். சதைகளும், நரம்புகளும் சர்க்கரை நோயின் அதிக அளவினால் பாதிக்கப்படுவதால் இக்குறைபாடு ஏற்படுகின்றது.
    * ‘டீன் ஏஜ்’ எனும் இளவயதினரின் எடை போட்டு விடுவோம் என்ற பயம் காரணமாக சாப்பிடாமல் கொலை பட்டினி இருத்தல்.
    * அடிக்கடி ஏதாவது சாப்பிடுவது பின்னர் அதனை முயற்சி செய்து வெளி எடுப்பது. எடை கூடி விடும் என்ற காரணத்தினால் இவ்வாறு செய்வர்.
    * வயிற்றில் அறுவை சிகிச்சை
    * வேகஸ் நரம்பில் அறுவை சிகிச்சை

    * வைரஸ் கிருமி தாக்குதல்.
    * நரம்பு மண்டல பாதிப்புகளான பார்க்கின்ஸனஸ், ஸ்ட்ரோக், மூளை அடி.
    * தைராய்டு குறைபாடு
    * சில குறிப்பிட்ட வகை மருந்துகள்

    * அட்ரினல் சுரப்பி பிரச்சினைகள்
    * வயிற்றில் அல்சர், கட்டி சிகிச்சை முறைகள்
    * சர்க்கரை அளவினை சீர் செய்தல்
    * இதற்கான மருந்துகள் நிறைய உள்ளன. மருத்துவ ஆலோசனையுடன் இதனை எடுத்துக் கொள்வது நல்ல தீர்வு கொடுக்கும்.

    * நாள் ஒன்றுக்கு ஆறு முறை சிறுசிறு அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
    * உணவை நன்கு மென்று மெதுவாய் உண்ண வேண்டும்.
    * சாப்பிட்ட உடன் படுக்கக் கூடாது. சாப்பிட்ட பிறகு மெதுவாய் கொஞ்ச நேரம் நடக்கலாம்.

    * தாக்குதல் அதிகமாக இருந்தால் சில நாட்கள் திரவ உணவில் இருப்பது பெரிதும் உதவும்.
    * அதிக கொழுப்பு, அதிக நார்சத்து இரண்டினையும் தவிர்க்க வேண்டும்.
    * அதிக வயிற்றுப் பிரட்டல் இருந்தால் மசாலா உணவுகள் கூடாது.
    * காபி, எண்ணை இவற்றினை நீக்கி விட வேண்டும்.

    * புகைபிடித்தல் கூடாது.
    * மது இப்பிரச்சினையை அதிகப்படுத்தும் என்பதால் மது சிறிதும் கூடாது.
    * நீர் குடிக்கும் பொழுது கூட நிதானமாய் குடிக்க வேண்டும்.
    * பவுடர் புரதம், பால் இவை நன்கு உதவும்.
    * தாது உப்புகள் சீர் வர இருக்க வேண்டும்.

    * வெள்ளை பிரட், வெள்ளை அரிசி நல்லது.
    * பழ ஜூஸ் நல்லது.
    * முறையான நேரத்தில் உண்ண வேண்டும்.

    * மஞ்சள், இஞ்சி, சீரகம், மிளகு இவற்றினை கண்டிப்பாய் உணவில் சேர்க்க வேண்டும்.
    * கண்டிப்பாக உடற்பயிற்சி தேவை. நடைபயிற்சி கூட போதும்.
    * குளிர்ந்த உணவுகள், குளிர்ந்த சூழ்நிலை இவற்றினை தவிர்க்க வேண்டும்.

    Next Story
    ×